Subscribe Us

header ads

வெலே சுதாவிடமிருந்து மேலும் சில வாக்குமூலங்கள்

பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவுக்கும் கொழும்பு மாவட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினருடன் இருந்த உறவு தொடர்பாக மேலும் பல ரசகியங்கள் பொலிஸார் விசாரனையில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவினால் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பபடும் ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்படுவது இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிலேயே என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொல்லுப்பிட்டியவில் அமைந்திருக்கும் வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அச்சந்தர்பங்களில் இருவருக்கும் இடையில் பெரிய அளவிலான பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவிற்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பினால் தற்பொழுது வரை பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலே சுதாவிற்கு கிடைத்த பணத்தில் குறிப்பிடப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு களனி பிரதேசத்தில் நிலம் ஒன்று பணத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது குறித்த பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார் மேலும் அபுதாபியில் அவரால் வெளிநாட்டு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.

Post a Comment

0 Comments