முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக்ஷ , யோசித்த ராஜபக்ஷ , சிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவாகியுள்ளன. இவற்றில் 30 முறையீடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜித்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜித்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


0 Comments