ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை 09 மணிக்கு ஆரம்பமான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை,
முற்பகல் 11 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
முற்பகல் 11.30 மணி வரையில் ஆட்சேபனைகளை கையளிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம்
செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம், நேற்று நண்பகல் 12 மணியுடன்
நிறைவடைந்திருந்தது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியற்கட்சிகளும், 02 சுயேட்சை
உறுப்பினர்களும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வீடியோ : ஜனாதிபதி மீடியா
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments