Subscribe Us

header ads

தபால்மூல வாக்களிப்பில் மஹிந்தவா, மைத்திரியா வெற்றி?

.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பில் 60 வீதத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எம்.ஈ.எஸ். என்ற சுயாதீனமான தனியார் அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளில் 16 ஆயிரம் பேரிடம் குறித்த நிறுவனம் கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 61 முதல் 63 வீதமான அரசாங்க உத்தியோகத்தர்கள் தபால்மூலம் வாக்களித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு 36 முதல் 38 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.

அரசாங்க உத்தியோகத்தர்களை பலப்படுத்திய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுமே.

தமது துறையை பலப்படுத்திய ஜனாதிபதிக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் என்பது இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்ட மக்கள் பேரணிகளில் இதுவரை சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்தளவு கூடுதல் எண்ணிக் கையான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட மக்கள் பேரணிகளை நடத்திய தலைவராக ஜனாதிபதி காணப்படுவதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வீட்டுக்கு வீடு செல்லும் பிரசாரப் பணிகளின் இரண்டாம் கட்டம் பூர்த்தியடைந்துள்ளது. எஞ்சிய நாட்களில் விடுபட்ட வீடுகளுக்குச் சென்று ஜனாதிபதிக்கு ஆதரவு திரட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments