Subscribe Us

header ads

அஸ்வரை அரசியலுக்குள் கொண்டு வந்தது பிரேமதாச இந்நாட்டுக்கு செய்த அழிவில் ஒன்று

 
ஆளும் கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்­வரை அர­சி­ய­லுக்கு கொண்டு வந்­தமை முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வினால் இந்­நாட்­டுக்கு இழைக்­கப்­பட்ட மற்­று­மொரு அழிவு என வர்­ணித்த ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி. யான சுனில் ஹந்­துன்­நெத்தி அஸ்­வ­ருக்கு பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் என்ற பத­வியைக் கொடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியில் அமரச் செய்ய வேண்டும் என்றும் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் செவ்­வாய்க்­கிழமை இடம்­பெற்ற 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் தெரி­வுக்­ கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு சுனில் ஹத்­துன்­நெத்தி எம்.பி. உரை­யாற்றிக்கொண்­டி­ருந்தார்.
இதன் போது அஸ்வர் எம்.பி. இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தினார்.
இத­னை­ய­டுத்து அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து நீங்கள் இங்கு இடை­யூ­று­களை விளை­விப்­ப­தற்­குத்தான் சம்­பளம் கொடுத்து உட்­கார வைத்­துள்­ளார்கள். அதனை நீங்கள் மிகச் சரி­யாக செய்­கி­றீர்கள். அஸ்வர் எம்.பி.யின் இடை­யூறு தொட­ரவே அஸ்வர் எம்.பி.க்கு பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் பதவி ஒன்றைக் கொடுத்து அவர் பாரா­ளு­மன்­றத்தின் பக்கம் வராத வகையில் பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியில் ஒரு அறையை ஏற்­பாடு செய்து அமரச் செய்­ய வேண்டும்.
அத்­துடன் திய­வன்னா ஓயாவைக் கடந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு வர முடி­யா­த­வாறு தடை விதிக்­கப்­பட வேண்டும்.
இதன்­போது எழுந்த அஸ்வர் எம்.பி. நான் பாரா­ளு­மன்ற விவ­கா­ர­மற்ற அமைச்சர் அல்ல. உள்ளூர் துப்­பாக்­கி­களை அழிக்கும் அமைச்சர் எனக் கூறினார்.

இதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி அமரர் ரணசிங்க பிரேமதாச இந்நாட்டுக்கு இழைத்த அழிவுகளில் ஒன்றுதான் அஸ்வர் எம்.பி. யை அரசியலுக்குள் கொண்டு வந்த தாகும் என்றார்.

Post a Comment

0 Comments