Subscribe Us

header ads

4.24 கிலோ எடையுள்ள வான் கோழியை உட்கொண்டு சாதனை படைத்த நபர்


வான் ­கோழி உண்ணும் போட்­டியில் பங்­கு­பற்­றிய ஒருவர் முழு வான் கோழி­யொன்றை உட்­கொண்டு பல­ரையும் திண­ற­வைத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

உலக வான் கோழி உண்ணும் போட்டி அமெ­ரிக்­காவின் கனக்­டிகட் மாநி­லத்தின் மஷான்­டுக்கெட் நகரில் அண்­மையில் நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் ஜோய் செஸ்னட் என்­பவர், 4.24 கிலோ­கிராம் (9.35 இறாத்தல்) எடை­யுள்ள வான் கோழி  இறைச்­சியை உட்­கொண்டு முத­லிடம் பெற்­ற­துடன் புதிய உலக சாத­னை­யையும் படைத்துள்ளார்.

இவர் 10 நிமி­டங்­களில் 4.24 கிலோ இறைச்­சியை உட்­கொண்டார்.

2011 ஆம் ஆண்டு சோன்யா தோமஸ் என்­பவர் 2.38 கிலோ­கிராம் வான் கோழி இறைச்­சியை உட்­கொண்­ட­மையே இது­வரை சாத­னை­யாக இருந்­தது.

கலி­போர்­னியா மாநி­லத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்னட் இன்று செவ்­வாய்க்­கி­ழமை தனது 31 ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அவருக்கு 5000 அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்பட்டது.


/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments