சீனாவின் கிழக்கு மாகாண நகரில் முன்பள்ளிச் சிறுவர்களை ஏற்றி வந்த மினி பஸ் ஒன்றுடன் ட்ரக் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 11 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
14 சிறுவர்களை நகரில் இருந்து ஏற்றி வரும் போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தால் சிறுவர்களின் பெற்றோர் மிகுந்த கவலை மற்றும் ஆத்திரத்தில் காணப்படுகின்றனர்.
சீனாவில் கடந்த காலங்களாகவே பாடசாலை போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதால் பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை சீன அரசாங்கம் கவனத்திலெடுக்காததால் இந்த விபத்துக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வாகனசாரதியின் கவனயீனமற்ற செயற்பாடு, குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல், வேகமாக செல்லுதல் போன்ற பாதுகாப்பற்ற் போக்குவரத்து செயற்பாடுகாலேயே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான செய்றபாடுகளில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென சீன மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் சீன பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்: எட்டுப் பேரை மட்டும் ஏற்றக் கூடிய மினி பஸ்சில் 14 சிறுவர்களை ஏற்றியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments