Subscribe Us

header ads

படம் சொல்லும் கவிதை


மிச்சமுள்ள எண்ண
முடிய முன்னம்
ஆடி அசையும்

சுடர் அனைய முன்னம்
வகுப்பு பாடத்த
படிச்சிடனும்

ஒத்த வெளக்கு 
வெளிச்சம் போதலன்னு
ரெண்டு வெளக்கு
நாங்க வச்சு படிக்குறம்
வெளிச்சம் போதலயோ
கண் பார்வ போதலயோ
நாங்க அறியோம்

ஒரு வேள கஞ்சியாச்சும்
எங்க ஒளப்புல 
வரனுமுன்னு
மனசு நெறய ஆச மட்டும்
நெஞ்சோரம்
ஓங்கிக் கெடக்கு
எங்களுக்கு

-நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்
(25.08.2014)

/JAH


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice     

Post a Comment

0 Comments