Subscribe Us

header ads

பெண்ணின் மூக்கில் சொகுசாக வாழ்ந்த அட்டை (அதிர்ச்சியூட்டும் படங்கள்)

பிரித்தானியாவில் பெண் ஒருவரின் மூக்கில் இருந்து மூன்று அங்குலம் உடைய அட்டையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

பிரித்தானியாவின் இடின்பெர்க் நகரை சேர்ந்தவர் டேனியலா லிவரேனி  என்ற பெண்ணே இந்த விசித்திரமான பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்.
 
கடந்த மாதம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேனியலாவுக்கு  நீண்ட நாட்களாகவே மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது.பின்னர் வீடு திரும்பிய டேனியலாவுக்கு இரத்தம் வரவில்லை என்றாலும் மூக்கில் ஏதோ குத்துவது போல இருந்துள்ளது.
 
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது தான் மூக்கில் அட்டை இருந்தது தெரியவந்துள்ளது.
 
உடனடியாக மருத்துவர்கள் மிகுந்த சிரமத்துடன் அட்டையை நீக்கியுள்ளனர்.
 
சிறியதாக இருந்த போது சென்றிருக்கலாம் என்றும், இரத்தத்தை குடித்து இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் வியட்நாமில் உள்ள குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கும் போது வாய் வழியாக சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments