Subscribe Us

header ads

ஜெயலலிதாவின் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்­டனை பெற்­றுள்ள  தமி­ழக முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மனுக்கள் மீதான விசா­ர­ணைகள் இன்று இடம் பெறுகின்றன.


தசரா விடு­முறை முடி­வ­டைந்­த­தை­ய­டுத்தே இன்று மீண்டும் பெங்­க­ளூரு உயர்­ நீ­தி­மன்­றத்தில் நீதி­பதி சந்­தி­ர­சேகர் முன்­னி­லையில் ஜெய­ல­லி­தாவின் பிணை மனுக்கள் மீது விசா­ரணை இடம்­பெ­று­கி­றது.

தமி­ழக முன்னாள் முத­ல­மைச்­சரும் அ.தி.மு.க. பொதுச் செய­லா­ள­ரு­மான ஜெய­ல­லிதா  சசி­கலா சுதா­கரன், இள­வ­ரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27- ஆம்  தீர்ப்பு வழங்­கப்­பட்டு  ஜெய­ல­லிதா உட்­பட 4நால்­வ­ருக்கும் தலா 4 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் பரப்­பன, அக்­ர­ஹாரா சிறையில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிலையில் ஜெய­ல­லிதா உள்­பட 4 பேர் சார்­பிலும் தீர்ப்பை எதிர்த்து  பெங்­க­ளுர் உயர்­நீ­தி­மன்­றத்தில்  மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது.

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்­டும், ஜாமீன் வழங்க வேண்டும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி  நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments