"கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே நீரூறும்
நெஞ்சிலே நேர்மை வந்தால் நீரிலும் தேனூறும்"
அன்பு, நேர்மை, நியாயம் என்பவற்றையெல்லாம் மனித இதயங்களில்தான் நாம் காணலாம்.. ஆனால் இதயமே இறுகிக் கல்லாய்ப் போனவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கலாம்? ஆனவரை சொல்லிவிட்டோம், எல்லோரிடமும் நியாயம் கேட்டவிட்டோம். ஊருக்கும் வெட்கம் இல்லை, இந்த உலகுக்கும் வெட்கம் இல்லை இதிலே இந்த “ஜஇ” களுக்கு வெட்கம் என்ன? வெற்று உலமாப் பீரங்கிகளுக்குத்தான் வெட்கம் என்ன? சமூக தலைமைத்துவங்களுக்குத்தான் வெட்கம் என்ன? அத்தனை பழமும் சொத்தைகளாக இருக்கும்போது அத்திப் பழத்தை குற்றம் சொல்ல யாருக்குமே வெட்கம் இல்லை.
அத்திப் பழத்திலே என்ன இருக்கும்? உள்ளே வெறும் சொத்தைதானே? இந்த குவைத் வைத்தியசாலை விடயத்திலும் நியாயக் குரல் எழுப்புபவர்களை வெறும் சொத்தைகள் என்றுதானே சமூகம் எண்ணுகிறது, சமூகத்துத் தலைமத்துவங்கள் எண்ணுகிறன்றன. நாங்கள் சொத்தையாய் இருந்துவிட்டுப் போகிறோம். உங்கள் ஊர் ஆதார வைத்திய சாலையில் எமது புகைப்படக் கருவிகளுக்குள் நாம் அடக்கிக் கொண்ட இந்த காட்சிகள் உண்மையா என்று அண்மையில் பிள்ளைகள் பெற்ற உங்கள் மனைவிமாரிடம், உங்கள் சகோதரிகளிடம், உறவுப் பெண்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டு அப்புறமாக இந்த அத்திப் பழங்களைக் குற்றம் காண முடியுமா என்று உங்கள் இதயங்களில் கைவைத்துக் கேளுங்கள்.
தாங்குகின்ற பிள்ளைச் சுமை தனியொரு பாரம் தாயாகப்போகும் இவர்கள் இரவில் குளிர் தரையில் தூங்குவத பெரும்பாவம், சமூக அநியாயம். இரவு நேரத்தில் இவர்கள் தரையில் தூங்கும் பரிதாபம் காண இரவு நேரத்தில் வருமாறு எமக்குச் செல்லப்பட்டது. பெண்கள் தூங்கும் அறைக்கு இரவு நேரத்தில் போவது போலொரு சின்னத்தனத்துக்கு அஞ்சி அதைத் தவிர்த்துக் கொண்டோம்.
பத்துமாதம் சுமர்ந்த வேதனை ஒரு தாய்க்குத் தெரியும், அதைப் பெறுகையில் வேதனையில் விழிம்புக்குச்சென்றது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அப்படிப் பெற்ற தன் செல்வங்களுக்கு ஒரு சிற்றெறும்பு கடித்துவிட்டால் கூட அந்தத் தாயுள்ளம் படம் அவஸ்தை அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். அதனால்தான் இரண்டு இரண்டு பிள்ளைகளாக ஒரு கட்டிலில் துயில விட்டு இடுப்ப நோக இப்படி கதிரைகளில் மணித்தியாளக் கணக்கில் இவ்ர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
தந்தைகளென பிள்ளைகளக்கு உரிமைகோரும் ஆண்களுக்குத் தெரியாது இந்தத் துயர். மேடைகளில் முழங்கும் ஆலிம்களக்குத் தெரியாது இந்தத் துயர். இதயம் கல்லாய்ப்போன ”ஜஇ”க்களுக்கு புரியவே புரியாது இந்தத் துயர்.
வருடக் கணக்கில் பழமையானது இந்த ”எகஸ் கதிர்” இயந்திரம். இதனோடுதான் போராடுகிறார்கள் உங்கள் வைத்தியசாலை துணை வைத்திய சேவை ஆளணியினர். கொஞம் தாமதமானால் கூட அவர்களை நொந்து கொள்கிறோம். நாளாந்தம் இந்த பழைய இயந்திரத்துடன் படும் பாட்டை அடுக்கிக் கொண்டே போகிறார் இந்த தொழில்நுட்ப வியலாளர். ஒவ்வொன்றாச் சொல்ல முடியாது, ஒரு மிக்கவும் சொல்ல முடியாத அளவக்கு நீண்ட கதை அது.
இந்தக் கூட்டம் ”ஸ்கேன்” செய்வதற்காக காத்திருக்கிறது. வண்டீயோ ஓட்டை வண்டி, மாடுமோ நொண்டி மாடு. வண்டி இழுக்க மாட்டாது மாயிறான்டி உன்புரஷன் என்று எப்போதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த நாட்டார் பாடல் நினைவு வருகிறதா? அதுதான் இங்க கதை. ஒரு நாளைக்கு60 முதல் 80 பேர் வரை “ஸகேன் செய்கி்றார்களாம். இந்த வயது போன இயந்திரம் எத்தனைக்கு இடம் கொடுக்கும்? இது அந்த வைத்தியசாலை அதிகாரிகள் கேள்வி. இதற்கு பதில் யாரிடம் எள்ளது?
இது தான் உங்கள் ஆதார வைத்தியசாலையில் பாவனையில் உள்ள ”ஸ்கேன்” இயந்திரம். எல்லாவற்றுக்கும் அரைசயின் கையயை எதிர்பார்க்க முடியாது. எங்காவது பாவனைக்குப் பயன்படாது அடைந்து கிடப்பவற்றைக் கொடுத்தால் அது தர்மாகாதா? எல்லாமே எமக்கென்று நினைப்பவர்களை நாம் என்ன செய்யலாம்?
உங்களுக்கு கண்ணிர் இருக்குமானால் அதைச் சொரியுங்கள் இல்லாவிட்டால் இதயம் பாறாங் கல்லாய்ப் போய்விட்ட”ஜஇ” களுடன் சேர்ந்து பாறாங்கற்களாகவே இருந்துவிட்டுப் போங்கள்.
தகவல் மூலம்: http://ummuhana.com/
0 Comments