-ரூசி சனூன் புத்தளம்-
புத்தளம் மாவட்ட பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தோரணையில் 20 வருட காலத்துக்கு பிறகு புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் காரியாலயம் இன்று திங்கட்கிழமை (20) மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தோரணையில் 20 வருட காலத்துக்கு பிறகு புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் காரியாலயம் இன்று திங்கட்கிழமை (20) மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி
ஜயசேகர இந்த காரியாலயத்தை திறந்து வைத்ததோடு வருகை தந்திருந்த பொது
மக்களின் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான
எஸ்.எச்.எம். நியாஸ், சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.
பாயிஸ் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
நன்றி: Puttalam Online
0 Comments