ரூசி சனூன் புத்தளம்
சிலாபம் பதுளுஓயா பிரதேசத்தில்
நடைபெற்ற அம்பியூலன்ஸ்,லொறி வாகன விபத்து தொடர்பாக அம்பியூலன்ஸ் வண்டி
சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை ஆட்சேபித்தும், குறிப்பிட்ட லொறி
சாரதிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்தளம் தள
வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (20) காலை பாரிய எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் தள வைத்தியசாலையின்
வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் என வைத்தியசாலையில்
கடமையாற்றும் அனைவருமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் வைத்தியசாலையின் அதி தீவிர
சிகிச்சை பிரிவை தவிர இதர அனைத்து சேவைகளும் இன்று காலை ஸ்தம்பிதமடைந்தன.
இங்கு துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது இதில் உள்ளடங்கிய விடயங்களாவன…
01. முந்தல் பொலிஸ் விசாரணை உண்மைக்கு புறம்பானதா ? பக்கச்சார்பற்ற விசாரணையை புத்தளம் வைத்தியசாலை எதிர்பார்க்கிறது.
02.
2010.10.18 அதிகாலை 3.00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் காயமடைந்தோர்
வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட அடுத்த கணமே எம்பியுலன்ஸ் வண்டி
அப்புறப்படுத்தப்பட்டது ஏன் ?
03.
எம்பியுலன்ஸ் வண்டிச்சாரதி தூங்கினார் என்பதை எதுவித விசாரணையும்
வண்டிச்சாரதியிடம் மேற்கொள்ளப்படாத நிலையில் பொலிஸார் ஊர்ஞிதம் செய்தது
எவ்வாறு ?
04. லொறி சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் எவ்வாறு அவர் மூலமே குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்படலாம் ?
05. லொறி சாரதி அதிகாலை 3.00-8.00
மணிவரை முந்தல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதது ஏன் ? மது
போதை பரிசோதனை பயத்தினாலா ?
06. இப்பயங்கர விபத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் பல கோணங்களில் திசை திருப்பப்பட்டது ஏன் ?
07. நீதிக்குப்புறம்பாக முந்தல்
பொலிஸ் லொறியுள் காணப்பட்டப் பொருட்களை வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில்,
வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையில், வாக்கு மூலம் பெறப்படாத
நிலையில் எவ்வாறு அப்புறப்படுத்தலாம் ?
08. மூன்று பேர் படுகாயம் உற்று, இருவர் மரணித்த நிலையில் சாரதி பிணையில் ஆயினும் எவ்வாறு விடுவிக்கப்படலாம் ?
09. இக்கோர சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற நடுநிலைமை பேணப்படாதது ஏன் ?
போன்ற விடயங்களே துண்டுப்பிரசுரத்தில் காணப்பட்டது.
இது தொடர்பாக புத்தளம் DIG
கருத்து தெரிவிக்கையில் அடுத்த24 மணி நேரத்துக்குள் இதனோடு தொடர்புடைய லொறி
சரதி கைது செய்யப்படுவதோடு இது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் உறுதி மொழி வழங்கினார்.
0 Comments