(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து தொடர்ச்சியாக நீர் பாய்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். வங்காலை இரத்தினபுரி கிராமப்பகுதியிலே இவ்வாறு காணப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள வீதி மற்றும் பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதிக்கு அருகாமையில் பரிசோதனைக்காக பள்ளம் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் பாய ஆரம்பித்தது. நிலத்தடி நீரே ஊற்றாக 24 மணி நேரமும் பாய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அப் பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் நீர் பாய்ந்து கொண்டிருப்பதை பார்வையிட்டதோடு அந் நீரையும் சுவைத்துப் பார்த்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன், குறித்த நீர் 24 மணி நேரமும் பாய்ந்து கொண்டிருக்கின்றது. குடிப்பதற்கு சுவையாக உள்ளது. இந்த நீரை சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருகில் கடல் இருக்கின்ற போதும் நீரில் எவ்வித உவர்ப்புத் தன்மையும் இல்லை. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.வங்காலை மக்களும், அதனை சூழ்ந்துள்ள கிராம மக்களும் இதனை பயன்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
/JAH
வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து தொடர்ச்சியாக நீர் பாய்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். வங்காலை இரத்தினபுரி கிராமப்பகுதியிலே இவ்வாறு காணப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள வீதி மற்றும் பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வீதிக்கு அருகாமையில் பரிசோதனைக்காக பள்ளம் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் பாய ஆரம்பித்தது. நிலத்தடி நீரே ஊற்றாக 24 மணி நேரமும் பாய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அப் பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் நீர் பாய்ந்து கொண்டிருப்பதை பார்வையிட்டதோடு அந் நீரையும் சுவைத்துப் பார்த்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன், குறித்த நீர் 24 மணி நேரமும் பாய்ந்து கொண்டிருக்கின்றது. குடிப்பதற்கு சுவையாக உள்ளது. இந்த நீரை சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருகில் கடல் இருக்கின்ற போதும் நீரில் எவ்வித உவர்ப்புத் தன்மையும் இல்லை. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.வங்காலை மக்களும், அதனை சூழ்ந்துள்ள கிராம மக்களும் இதனை பயன்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
/JAH
கவனத்திற்கு:
இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம்
தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments