ஊவா மாகாண
சபைத் தேர்தலில் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்கு வீதத்தை பெற்றுள்ள
நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்த
ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது வேட்பாளருக்கு பதிலாக தனித்து வேட்பாளரைக் களமிருக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதற்கான ஊகம் வெளியிடப்பட்டது.
அதேவேளை ஊவா தேர்தல் முடிவுகள் ஆய்வு செய்து
கருத்து வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வாளரான கலாநிதி தயான் ஜயதிலக்க, அடுத்த
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுடன் மோத வேண்டுமாயின் ஐக்கிய தேசியக்
கட்சி நிறுத்த வேண்டிய பொருத்தமான ஒரே நபர் சஜித் பிரேமதாச என
குறிப்பிட்டுள்ளார்.
DC


0 Comments