உலக கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிகளில் மூன்றாம் இடத்தை தீர்மானிப்பதற்கான போட்டியிலும் பிரேசில் அணி தோல்வியைத் தழுவியது.
இம்முறை
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தம் பிரேசில் தனது இறுதி
ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த போட்டித் தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டி பிரேசிலா நகரில் இன்று அதிகாலை நடைபெற்றது.
ஜெர்மனி
அணியிடம் 7-1 எனும் கணக்கில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரேசில்,
சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியையாவது பெற்றுக் கொள்ளும் எதிர்பாரப்புடன்
இன்று களமிறங்கியது.
எனினும்
ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய போதிலும் முதல் பாதியில்
நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது
பாதியில் கோல்களை போடுவதற்காக பிரேஸில் அணி வீரர்களால் எடுக்கப்பட்ட
முயற்சிகள் நெதர்லாந்து வீரர்களால் இலகுவாக முறியடிக்கப்பட்டன
கடந்த
இரணடு போட்டிகளில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதை அடுத்து அரையிறுதிப்
போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட பிரேஸில் அணித் தலைவர் தியாகோ சில்வா
நேற்றைய போட்டியில் பங்கேற்றார்.
எனினும் இந்த போட்டியிலும் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இறுதியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோலை 3ஆவது இடத்தை கைப்பற்றியது.
நெதர்லாந்து அணியில் பெர்ஸி, பிளைண்ட், வினால்டம் ஆகியோரே நெதர்லாந்தி அணி சார்பில் தலா ஒரு கோலை போட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நெதர்லாந்து அணி மூன்றாம் இடத்தை பிடித்த முதல் சந்தப்பம் இதுவென்பதும் குறிப்பிடதக்கது.
அத்துடன்
1940 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரேஸில் அணி தனது சொந்த மண்ணில் இரண்டு
போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த முதல் சந்தரப்பம் இதுவாகும்


0 Comments