கட்சித் தாவல் ஒன்று தப்பாகி போன சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை சேர்ந்த தெகிவளை – கல்கிஸ்ஸ
நகரசபை உறுப்பினர் சவித்ர டி சில்வா என்பவர் இன்று கொழும்பில் நடந்த பொது
வேட்பாளர் ஆதரவு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் , பொது வேட்பாளரை ஆதரிக்க
வந்துள்ளதாக கூறி அறிவிப்பு மேசைக்கு வந்தவுடன் தான் ஒருபோதும் மகிந்த
ராஜபக்ஸவிற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்னால் பொது வேட்பாளரை ஆதரிக்க
முடியாது என்ற தொனியில் கூறியுள்ளார்.
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உட்பட ஐ.தே.க முக்கிய
உறுப்பினர்கள், பலதரப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலே அவர்
அவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.தே.க கட்சி பலி வாங்கும் கட்சி, இங்கு ஜனநாயகம் இல்லாமல் உள்ளது,
யுத்தத்தை வென்று நாட்டை காப்பற்றியவரை குழியில் தள்ள முயற்சிக்கின்றது.
அரசின் அபிவிருத்திகளை விமர்சனம் செய்வதிலே குறியாக உள்ளது என ஏகபட்ட
குற்றச்சாட்டுகளை முன் வைத்து விட்டு தான் உட்கார்ந்து இருந்த கதிரையையும்
தள்ளி விட்டு எழுந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு கருத்து தெரிவித்த சுஜீவ சேனசிங்க, ” நன்கு தயார் செய்து அனுப்பி உள்ளனர் என தெரிவித்தார்.”
இந்த சம்பவத்தின் முழு வீடியோ.
0 Comments