ரமலான்
நோன்பிருக்கும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,
வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ‘இப்தார்’ விருந்து அளித்தார்.
விருந்தினர்களுக்கு இடையில் உரையாற்றிய ஒபாமா, ’நம் அனைவருக்கும் பொதுவான
பல விஷயங்களை நாம் கொண்டாடி வருகிறோம். எனினும், வன்முறையாலும்
தீவிரவாதத்தாலும் ஒன்றினை உருவாக்காவிட்டாலும் உலகின் பல மூலைகளில் பல
அழிவுகள் நடந்து வருவதை காண்கிறோம்.
பொதுமக்கள் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்துவதை எந்த நாட்டாலும்
ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை என்னால் மிக தெளிவாக கூற முடியும். அந்த
வகையில் ஹமாஸ் இயக்கத்தின் மன்னிக்க முடியாத செயலில் இருந்து தன்னை
பாதுகாத்துக் கொள்ளும் எல்லா உரிமையும் இஸ்ரேலுக்கு உண்டு என்பதிலும் நாம்
மிக தெளிவாக இருக்கிறோம்.
இதில், பாலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பும், காயங்களும்
சோகத்துக்குரியது. எனவே தான், அவர்கள் யாராக இருந்தாலும், எங்கே
இருந்தாலும் பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாம்
வலியுறுத்தி வருகிறோம்’ என்று கூறினார்.
இந்த விருந்தில் அமெரிக்காவில் உள்ள அரபு நாடுகளுக்கான தூதர்கள், அமெரிக்க
பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்குள்ள பிரபல முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.








0 Comments