Subscribe Us

header ads

இனவாதத்தை தூண்டி ஆட்சியை தக்கவைக்கவே அரசாங்கம் முயற்சி

இன­வா­தத்­தினை தூண்டி அதன் மூலம் ஆட்­சியை தக்க வைத்­துக்­கொள்­ளவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் இது விதி­வி­லக்­கல்ல என தெரி­விக்கும் ஜே.வி.பி. இம்­முறை ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் மக்கள் அர­சாங்­கத்­திற்கு தக்க பாடத்­தினை கற்­பிப்­பார்கள் எனவும் குறிப்­பிட்­டது.ஜே.வி.பி. யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் விஜித ஹேரத் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
ஏனைய மாகாண சபைத்­தேர்­தலை விடவும் ஊவா மாகாண சபைத்­தேர்தல் அர­சாங்­கத்­திற்கு மிக முக்­கி­ய­மா­னது. தமது ஆட்சி தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் இத்­தேர்­த­லினை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். கடந்த முறை ஊவா மாகாண சபைத்­தேர்தல் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்­பெற்­றது. அதன்­பின்னர் அர­சாங்கம் உட­ன­டி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­தி­யது. இம்­மு­றையும் அவ்­வா­றான நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. 2016ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டிய நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்­தலின் முடிவில் அர­சாங்கம் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் உறு­தி­யான முடி­வினை எடுக்கும்.
 
எனவே, அர­சாங்கம் ஊவா மாகாண சபைத் தேர்­தலை குறி­வைத்து தமது தந்­தி­ரங்­களை பிர­யோ­கிக்கும். இன்று அர­சாங்கம் தேர்­தலில் வெற்­றி­பெ­றவோ தமது ஆட்­சி­யினை தக்க வைத்­துக்­கொள்­ளவோ இன­வா­தத்­தினை ஆயு­த­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. இது ஊவா மாகாண சபைத் தேர்­த­லிலும் விதி­வி­லக்­கா­ன­தல்ல. எனினும் மக்கள் தெளி­வான முடி­வினை எடுப்­பார்கள். இன்று நாம் பய­ணிக்கும் பாதை மிக மோச­மா­னது. மக்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது என்­பதை மக்கள் நன்கு உணர்ந்து விட்­டனர். எனவே அர­சாங்­கத்தின் அடா­வ­டித்­த­ன­மான ஆட்­சிக்கும் அடக்­கு­மு­றை­க­ளுக்கும் தக்க பதி­ல­டி­யினை இம்­முறை ஊவா மாகாண தேர்­தலில் மக்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள். கடந்த இரு மாகாண சபைத் தேர்­த­லிலும் மக்கள் அர­சாங்­கத்­திற்கு சிவப்பு விளக்கு சமிக்­ஞை­யினை காட்டி எச்­ச­ரித்­துள்­ளனர். அதே­நி­லைமை அல்­லது அதை விட மோச­மான நிலை­மை­யினை இம்­முறை ஊவா மாகாண தேர்­தலில் மக்கள் வெளிப்­ப­டுத்­து­வார்கள் எனவும் தெரி­வித்தார்.
 
ராம­லிங்கம் சந்­தி­ர­சேகர்
 
இவ் செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஜே.வி.பி. யின் முன்னாள் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லைவர் ராம­லிங்கம் சந்­தி­ர­சேகர் குறிப்­பி­டு­கையில்;
 
ஊவா மாகா­ணமே இலங்­கையில் மிகவும் வறு­மைக்­குள்­ளான மாகா­ண­மாகும். வடக்கு கிழக்கு அடுத்த நிலையில் இருக்­கின்­றது. ஆனால் வடக்கில் கடந்த காலங்­களில் யுத்தம் இடம்­பெற்­றது. ஆனால் ஊவா மாகாணம் அவ்­வா­றான பாதிப்­பினை எதிர்­நோக்­க­வு­மில்லை. அவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் தட்­டிக்­க­ழித்த மாகா­ண­மா­கவே இது மாறி­யுள்­ளது.
 
அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் கட்­சிகள் தமது குடும்ப அர­சி­யலில் ஆதிக்­கத்தை செலுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே இன்று ஊவா மாகாண சபையில் தேர்­தலை முன்­னிட்டு இவர்கள் மக்­க­ளுக்கு பொருட்­க­ளையும் பணத்­தையும் கொடுத்து தமது ஆட்­சியை தக்க வைத்­துக்­கொள்ள நினைக்­கின்­றனர்.
 
கல்வி மட்­டத்தில் மிகவும் பின்­தங்­கிய நிலை காணப்­ப­டு­கின்­றது. தமிழ் மொழியில் சித்­தி­ய­டைந்த வீதம் 25 வீத­மா­கவே உள்­ளது. அவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் கட்­சிகள் மக்­களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. எனவே இதில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணி முயற்சித்துள்ளது. தோட்டத்தொழிலாளர்கள் மற்றவர்களை வாழவைக்க போராடி கொண்டிருக்கின்றனர். இப்போது உங்ளுக்காக உங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட வேண்டும். அதற்கு எம்முடன் கைக்கோர்த்திருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
 

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments