Subscribe Us

header ads

(வீடியோ, படம்) புனரமைப்புப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி பேருவளை விஜயம்!

அளுத்கமை, பேருவலை பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என்பன இராணுவப்படையினரால் மீள புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிற்பகல் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

பத்திராகொடை ,தர்கா நகர் ,மீரச்சிகந்தை, வராப்பிட்டிய ,அளும்கமை ஆகிய பகுதிகளுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு பனரமைப்பு வேலைகளை பார்வையிட்டார்.

இப்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தார்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ,ரோஹித அபேகுணவர்த்தன, புனரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் உபய மெதவெல ஆகியோரும் ஜனாதிபதியுடன் அப்பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்.
நன்றி:News.lk



HE-Beruwela-1
HE-Beruwela
HE-Beruwela-lead
HE-Beruwela-3
HE-Beruwela-4

Post a Comment

0 Comments