Subscribe Us

header ads

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த வியாபாரி

டெல்லி பூராலி பகுதியில் உள்ள தரம்வீர் காலனியில் வசித்தவர் ரதேஷியாம் பிரசாத். வியாபாரியான இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
வீட்டில் இருந்த பிரசாத் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது.
அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி இருந்தார். தனது இந்த தற்கொலைக்கு குடும்பத்தினர்தான் காரணம் என்று கடிதத்தில் குற்றம் சாட்டி இருந்தார். தனது மனைவி பணம் முழுவதையும் அவரது பெற்றோர்களுக்கும், அவரது சகோதரர்களுக்கும் கொடுப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அந்த தற்கொலை கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் பாராட்டி இருந்தார். காங்கிரசின் குடும்ப ஆட்சியை தோற்கடித்ததற்காக மோடியை புகழ்ந்து கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Post a Comment

0 Comments