Subscribe Us

முல்லைத்தீவில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வைபவம்!

யுத்த வெற்றியினை நினைவு கூரும் வைபவம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நேற்று முல்லைத்தீவில் நடைபெற்றது.
 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்ற இந்த வைபவத்தில் யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்கள் மற்றும்  உயிரிழந்த பொது மக்களுக்கு   அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 
 
இந்நிகழ்வினில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட வன்னி கட்டளை தளபதிகள் பலரும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட அரச அதிபர்களும் கலந்துகொண்டனர். 

Post a Comment

0 Comments