Subscribe Us

மன்னாரில் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் ஒரு கிலோகிராம் 450 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மன்னார் நீவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments