நாடெங்கும் வெசாக் தின கொண்டாட்டங்கள்
மிகச்; சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறன. இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட
நாட்டின் பல இடங்களில் வெசாக் பந்தல்கள் (தோரணங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல தானசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வீதிகளிலும் வீடுகளிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும்
கட்டிடங்களிலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும்
காட்சிப் படுத்தப்பட்டள்ளன.
சில இடங்களில் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான மக்கள் வெசாக் பந்தல்களை பார்வையிட்டு வருகின்றனர்.
வழமை போன்று வெசாக் கொண்டாட்டத்திற்காக நாட்டின் நாலாபாகங்களிலும்
இருந்தும் கொழும்பிற்கு பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.







0 Comments