
சனிக்கிழமை (05) மாலை புத்தளத்தில் இடியுடன் கூடிய அடை மழை பெய்தது.
இந்நிலையில், தேநுவர பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் விவசாய வேலையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆர்.எம்.தினேஷ் ருவன் ரத்நாயக்க (வயது 25),
பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கே.பிரேமதிலக (வயது 36) ஆகியோரே
மின்னல் தாக்கத்திற்குள்ளாகியதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கருவலகஸ்வெவ கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments