Subscribe Us

header ads

இருபதுக்கு- 20 உலக கிண்ணத்தை வெல்வது யார்?

உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை
தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்களைக் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியொன்றில் இந்த அணிகள் மோதும் மற்றுமொரு சந்தர்ப்பம் இரண்டு அணி இரசிகர்களுக்கும் கிட்டியுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் விளையாடிய தொடரின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி ஒன்பது போட்டிகளிலும் இலங்கை அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகள் வெற்றிதோல்வி இன்றி நிறைவடைந்துள்ளன.

இலங்கை அணிக்கு இன்றைய போட்டி உணர்வு பூர்வமான ஒன்றாக அமையவுள்ளது.

சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கு சிறந்த முறையில் பிரியாவிடைகொடுக்கும் நோக்கிலும் கடந்த உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையிலும் இந்திய அணியை, இன்றைய தினம் இலங்கை அணி எதிர்கொள்ளும் என கிரிக்கெட் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை இறுதி 11 வீரர்களில் டினேஷ் சந்திமால், அஜந்த மெண்டிஸ், திஸ்ஸர பெரேராமற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரின் யார் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் விளையாடிய அதே இந்திய அணியே இன்றைய போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments