எந்தவொரு சமூகத்திலும் தீய சக்திகள் சிறுபான்மையினரே, எல்லா சமூகங்களிலும் மனித நேய சக்திகள் தத்தமது மத விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்களே பெரும்பான்மையினர்.
போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் கூலிப்படைகள் முஸ்லிம்களை இலக்கு வைத்து செயற்படுகின்றமை நாடறிந்த விடயமாகும்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம்களை அவசரமாக எதிர்வினையாற்றச் செய்வதற்கான நகர்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உணர முடிகிறது.
முஸ்லிம்களை ஆத்திரமூட்டி இன மத வெறியை தூண்டிவிட பிறநாட்டு பசுத்தோல் போர்த்திய புலிகளாக வெளிநாட்டு கேடிகளைஅக்கிரமக் காரர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக நாம் அறிகின்றோம்.
இயன்றவரை தீய சக்திகளின் நோக்கங்களை இலக்குகளை இலகுவில் அடையச் செய்யும் விதத்தில் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது,
உலமாக்களும் புத்திஜீவிகளும் பல்கலைக்கழக சமூகமும்,சமூக ஆர்வலர்களும் சமூகத்தின் அனைத்து அங்கங்களும் தத்தமது பிரதேசங்களில் வேற்றுமைகளுக்கு மத்தியில் இணக்கம் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ள அடுத்த சமூகங்களுடன் சமாதான சகவாழ்வு குறித்து மிக மிக அவதானமாக சமூகத்தை வழி நடாத்தவேண்டும்.
தீய சக்திகளின் பின்னால் அரசியல் நோக்கங்களுடன் அதிகார வர்க்கத்தினர் இருப்பதாக அல்லது அதிகார வர்க்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிரான காடைத் தனங்களை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர முடியாதிருப்பதாக நாம் உணர்வதால் தத்தமது பிரதேசங்களில் உள்ள ஆளும் எதிர்க் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சியினர், அடுத்த சமூகங்களின் சிவில் தலைமைகள் போன்ற தரப்புக்களுடன் உள்ளூர் தலைமைகள் நல்லுறவுகளை பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் காலத்தின் கட்டாயமாக்கும்.
தேசிய ஷூரா சபை மேற்சொன்ன விடயங்களில் மிகக் கவனமாக ஆராயப் பட்ட வழிகாட்டல்களை தயார் செய்துள்ளதனால் www.nationalshoora.com இணையத் தளத்தில் உள்ள படிவங்களை நிரப்பி அதன் செயற்பாடுகளில் சமூகத்தின் சகல தரப்புக்களும் பங்கெடுக்கும் அதேவேளை அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், ஆகிய சிவில் சன்மார்க்கத் தலைமைகளின் வழிகாட்டல்களை கண்டிப்பாக சகல தரப்புக்களும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளும் அனுசரித்து நடத்தல் வேண்டும்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களும் உலமாக்களும் குறிப்பாக கதீப் மார்களும் தமது பங்களிப்பினை செய்வார்கள் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.
போருக்குப் பின்னரான இலங்கையில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் கூலிப்படைகள் முஸ்லிம்களை இலக்கு வைத்து செயற்படுகின்றமை நாடறிந்த விடயமாகும்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம்களை அவசரமாக எதிர்வினையாற்றச் செய்வதற்கான நகர்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உணர முடிகிறது.
முஸ்லிம்களை ஆத்திரமூட்டி இன மத வெறியை தூண்டிவிட பிறநாட்டு பசுத்தோல் போர்த்திய புலிகளாக வெளிநாட்டு கேடிகளைஅக்கிரமக் காரர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக நாம் அறிகின்றோம்.
இயன்றவரை தீய சக்திகளின் நோக்கங்களை இலக்குகளை இலகுவில் அடையச் செய்யும் விதத்தில் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது,
உலமாக்களும் புத்திஜீவிகளும் பல்கலைக்கழக சமூகமும்,சமூக ஆர்வலர்களும் சமூகத்தின் அனைத்து அங்கங்களும் தத்தமது பிரதேசங்களில் வேற்றுமைகளுக்கு மத்தியில் இணக்கம் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ள அடுத்த சமூகங்களுடன் சமாதான சகவாழ்வு குறித்து மிக மிக அவதானமாக சமூகத்தை வழி நடாத்தவேண்டும்.
தீய சக்திகளின் பின்னால் அரசியல் நோக்கங்களுடன் அதிகார வர்க்கத்தினர் இருப்பதாக அல்லது அதிகார வர்க்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிரான காடைத் தனங்களை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர முடியாதிருப்பதாக நாம் உணர்வதால் தத்தமது பிரதேசங்களில் உள்ள ஆளும் எதிர்க் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சியினர், அடுத்த சமூகங்களின் சிவில் தலைமைகள் போன்ற தரப்புக்களுடன் உள்ளூர் தலைமைகள் நல்லுறவுகளை பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் காலத்தின் கட்டாயமாக்கும்.
தேசிய ஷூரா சபை மேற்சொன்ன விடயங்களில் மிகக் கவனமாக ஆராயப் பட்ட வழிகாட்டல்களை தயார் செய்துள்ளதனால் www.nationalshoora.com இணையத் தளத்தில் உள்ள படிவங்களை நிரப்பி அதன் செயற்பாடுகளில் சமூகத்தின் சகல தரப்புக்களும் பங்கெடுக்கும் அதேவேளை அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், ஆகிய சிவில் சன்மார்க்கத் தலைமைகளின் வழிகாட்டல்களை கண்டிப்பாக சகல தரப்புக்களும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் வாதிகளும் அனுசரித்து நடத்தல் வேண்டும்.
முஸ்லிம் ஊடகவியலாளர்களும் உலமாக்களும் குறிப்பாக கதீப் மார்களும் தமது பங்களிப்பினை செய்வார்கள் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.
0 Comments