Subscribe Us

header ads

அல் அரேபியா அறிவிப்பாளர்களால் இடையூறுக்குள்ளான சவூதி அரேபிய திருமண நிச்சயதார்த்த வைபவம்


சவூதி அரே­பிய தொலைக்­காட்சி அறி­விப்­பா­ளர்கள் இருவர் தொடர்­பான வாக்­கு­வா­தத்தால் திரு­மண நிச்­ச­ய­தார்த்த வைப­வ­மொன்று இடை­யூ­றுக்­குள்­ளான சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அல் அரே­பியா தொலைக்­காட்­சியின் அறி­விப்­பா­ளர்­க­ளான சுஹைர் அல் காஸி மற்றும் கிறிஸ்­டியன் பெஸ்ரி ஆகி­யோரை குறிப்­பிட்டே சர்ச்சை ஆரம்­பித்­தது.

மேற்­படி திரு­மண நிச்­ச­ய­தார்த்த வைப­வ விருந்தின்போது மண­ம­கனின் தந்தை தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­களை தன்­னி­யக்க கட்­டுப்­பாட்டுக் கருவி (ரிமோட் கொன்ட்ரோல்) மூலம் மாற்­றிக்­கொண்­டி­ருந்தார்.
 
ஒரு கடத்தில் அவர் அல் அரே­பியா அலை­வ­ரி­சையை தெரி­வு­செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் அல் அரே­பியா அல் ஹதாத் அலை­வ­ரி­சைக்கு மாற்­றினார்.

இவர் அடிக்­கடி அலை­வ­ரி­சையை மாற்­று­வது அங்­கி­ருந்த மண­ம­களின் தந்­தைக்கு விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

'நீங்கள் இரு­வரில் ஒரு­வரை தெரி­வு­செய்­து­விட்­டீர்­களா.... யார் அது.... சுஹைரா அல்­லது கிறிஸ்­டி­யனா?' என மண­ம­கனின் தந்­தை­யிடம் மணமகளின் தந்தை கிண்­ட­லாக கேட்டார்.

இந்த கேள்வி மண­ம­கனின் தந்­தைக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும்
அதை­ய­டுத்து வைபவம் இடை­யூ­றுக்­குள்­ளா­ன­தா­கவும் சவூதி அரே­பிய
பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது.

இந்த வைபவம் இரத்­தாகும் அச்­சு­றுத்­தலும் ஏற்பட்டது. ஆனால் விருந்தினர்கள் சிலர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதால் நிச்சயதார்த்த பைவபவம் தொடர்ந்து நடைபெற்றது.

Post a Comment

0 Comments