க.பொ.த சாதாரணத்தர பரீட்சையின் போது
இரண்டாம் மொழியாக தமிழ்
அல்லது சிங்களத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
பல்கலைக்கழக தெரிவின்போது மேலதிக புள்ளிகளை வழங்குவதற்கான அமைச்சரவை
அங்கீகாரத்தினை உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா கோரியுள்ளார்.
இதற்கமைய தமிழ் அல்லது சிங்கள மாணவர்
இரண்டாம் மொழியான சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்
அவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவின் போது விசேட புள்ளிகள் வழங்கும்
வகையிலேயே இவ்வமைச்சரை அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது.
இரண்டாம் மொழிக்கு 'ஏ' தரம் பெற்றால் 5
புள்ளிகளும் - 'பீ' தரத்துக்கு 4 புள்ளிகளும் 'சி' தரத்துக்கு 3
புள்ளிகளும் 'எஸ்' தரத்துக்கு 2 புள்ளிகளும் வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்படுகிறது..
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின்
கீழ், அரச பல்கலைக்கழகங்களில் மும்மொழிகளிலும் கற்பிக்கப்படும்
பாடநெறிகளுடன் இன ரீதியாக கலக்கப்பட்ட மாணவர் சமூகத்தை உறுதிப்படுத்தலுக்கு
அமைவாக இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments