சாரதி
பயிற்றுவிப்பாளர்ளுக்கான அனுமதியை பெற்றிராமல் அத்தொழிலை மேற்கொள்வோருக்கு
எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்
அமரசிறி சேனாரத்தின தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சிலர் சாரதி பயிற்றுவிப்பாளர்ளுக்கான அனுமதியின்றியே இத்தகைய பயிற்றுவிப்பு நிலையங்களை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதனால் நாட்டில் போலி சாரதிகளைத்தான் சந்திக்க நேரிடும் எனவும் இதனால் இத்தகைய நிலையங்களை முற்றுகை இட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிய வருகிறது

0 Comments