Subscribe Us

header ads

ஐ.தே.க.கோட்டையான கொழும்பு மத்திய தொகுதியை ஹிருனிக்காவுடன் இணைந்து வெற்றியீட்டுவோம் :பைஸர்

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய கொழும்பு தொகு­திக்கு இணைப்­பா­ள­ராக ஹிரு­னிக்கா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கோட்­டை­யாக விளங்கும் மத்­திய கொழும்பை நாம் இணைந்து செயற்­பட்டு வெற்­றி­யீட்­டுவோம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய கொழும்பு இணைப்­பா­ளர்­களில் ஒரு­வரும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு பிரதி அமைச்­ச­ரு­மான பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.
 
கொழும்பு, கோட்டை உலக வர்த்­தக மைய கட்­டி­டத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் மேலும் தெரி­வித்­த­தா­வது:
 
அமைச்சர் பெளஸி முன்பு கொழும்பு மத்­திய தொகு­தியின் அமைப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­வந்தார். மத்­திய கொழும்­புக்கு மேலும் ஒரு அமைப்­பாளர் தேவை என்­பதை உணர்ந்த ஜனா­தி­பதி என்னை இணைப்­பா­ள­ராக நிய­மித்தார். கொழும்பு ஓர் பல்­தொ­குதி என்­பதால் இணைப்­பா­ள­ராக ஹிரு­னிக்­கா­கவும் இப்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 
 
இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு வாய்ப்­பு­களை வழங்கி இளம் தலை­மு­றை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதை ஜனா­தி­பதி நன்கு உணர்ந்­துள்ளார்.
 
ஐக்­கிய தேசியக் கட்­சியின் கோட்­டை­யாக விளங்கும் மத்­திய கொழும்­பிற்கு அக்­கட்சி தேவை­யான அபி­வி­ருத்­தி­களைச் செய்­ய­வில்லை. பாது­காப்புச் செய­லாளர் சுமார் 80 ஆயிரம் மக்­க­ளுக்­காக வீட­மைப்புத் திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளார். கண்­டியில் நான் காணாத வறு­மைக்­கோட்­டி­னையும் மிகக் கஷ்­ட­மான மக்­களின் வாழ்க்­கை­யையும் கொழும்பில் காண்­கிறேன். அரசு கொழும்பில் மேற்­கொண்­டுள்ள அபி­வி­ருத்திப் பணிகள் நிச்­சயம் வெற்­றி­களைப் பெற்­றுத்­தரும்.
 
நான் பிர­தேச அர­சி­ய­லுடன் எனது அர­சி­யலை முன்­னெ­டுக்­கிறேன். மத்­திய கொழும்பில் என்­னுடன் முன்னாள் உறுப்­பி­னர்கள் 11 பேர் இணைந்து செயற்­ப­டு­கி­றார்கள். முதலில் கட்சி, அடுத்­தாக விருப்பு வாக்­குகள் என்­பதே எனது அர­சியல். ஆனால், கட்­சி­யி­லுள்ள சிலர் வெற்­றி­லையை வெல்­லு­வ­தை­விட உற­வி­னர்­க­ளுக்கு விருப்பு வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வதில் ஆர்வம் காட்­டு­கி­றார்கள்.
 
ஐக்­கிய தேசியக் கட்சி மேல் மாகாண சபைத் தேர்­தலில் எவரை நிறுத்­தி­னாலும் எமக்குப் பிரச்­சி­னையே இல்லை. கொழும்பை வெற்றி கொள்ள முடியும் என்ற உறு­தி­யி­லேயே ஜனா­தி­பதி இருக்­கிறார். எதிர்க்­கட்­சிகள் எவரை நிறுத்­தி­னாலும் போட்­டியை எதிர்­கொண்டு வெற்­றி­யீட்ட நாம் தயா­ராகவே இருக்­கிறோம்.
 
இன்று இன­வா­திகள் அர­சி­யலில் இலாபம் தேட முயற்­சிக்­கி­றார்கள். தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் யுத்­த­கா­லத்தில் அமை­தி­யாக இருந்­த­வர்கள் இன்று இன­வாதம் பேசு­கி­றார்கள். இரத்தம் சிந்­தி­பெற்ற வெற்­றியை நாம் பாது­காத்துக் கொள்ள வேண்டும். இன­வாதம் பேசு­ப­வர்­களை தேர்­தலில் மக்கள் நிச்­சயம் நிரா­க­ரிப்­பார்கள். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பதில் ஜனா­தி­பதி முனைப்­புடன் இருக்­கிறார்.
 
பௌத்­தர்­களில் பெரும்­பான்­மை­யானோர் கரு­ணை­யுள்­ள­வர்கள் இன­வாதம் பேசி ஒரு போதும் வெற்றி கொள்ள முடி­யாது. எல்லா சம­யத்­திலும், அடிப்­படை வாதிகள் இருக்­கி­றார்கள். நாட்டில் நாம­னை­வரும் சகோ­தர பாசத்­துடன் வாழ­வேண்டும். இன ஒற்­று­மைக்கும் சகோ­த­ரத்­துவத்துக்கும் ஊட ­க­வி­ய­லா­ளர்கள் தமது பங்­க­ளிப்­பினை நல்க வேண்டும். தேர்­தலில் இன­வாத பிர­சா­ரங்­களை ஊட­கங்கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.
 
இணை­ய­மைப்­பாளர் பௌஸி பல­வீ­ன­மா­னவர் என்று நான் ஒரு­போதும் சொல்­ல­வில்லை. ஒரு­வரைத் தூசித்து அர­சியல் செய்­ப­வ­னல்ல நான். மத்­திய கொழும்பில் அர­சியல் வெற்­றிடம் ஒன்­றுக்­கான தேவை­யுள்­ளது என்று நினைத்து ஜனா­தி­பதி என்னை இணை­ய­மைப்­பா­ள­ராக நிய­மித்­தி­ருக்­கலாம்.
 
ஹிரு­னிக்­கா­வையும் இணை­ய­மைப்­பா­ள­ராக நிய­மித்­த­மைக்கு நான் ஜனா­தி­ப­திக்கு நன்றி தெரி­விக்­கிறேன். மேல் மாகாண சபை உறுப்­பி­னர்கள், மாந­கர சபை உறுப்­பி­னர்கள் என்று எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஹிருனிக்காவுக்கு ஆதரவினை வழங்குவோம்.
 
மேல் மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிடுகின்றமை எமக்கு சவாலே இல்லை. எமக்கென்று ஓர் வாக்குவங்கியுள்ளது. அவர்கள் எமக்கே வாக்களிப்பார்கள். பல அபிவிருத்திகளை இந்த அரசின் மூலம் பெற்றுக்கொண்ட கொழும்பு மத்திய மக்கள் நிச்சயம் எம்மை வெற்றியடையச் செய்வார்கள் என்றார்.

Post a Comment

0 Comments