மஹேல ஜெயவர்தனவின் நிதான சதத்துடன் இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களைக்குவிக்க 223 ஓட்டங்களால் பின்னிலை வகித்த பாகிஸ்தான் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பி த்துள்ளது.
19 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஆரம்பமே தடுமாறிய அவ்வணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை-– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் நடைபெற்று வருகின்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் அனைத்தையும் முதல் நாளிலேயே பறித்த இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் 165 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவந்தது.
பின்னர் பதிலுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்று முன்தினம் 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.
இந்நிலையில் போட்டியின் 3 ஆவது நாளான நேற்று மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 70 ஓட்டங்களைப் பெறுவதற்குள் மீதி விக்கெட்டுக்கள் அனைத்தையும் இழந்து முதல் இனிங்ஸுக்காக 388 ஓட்டங்களைப்பெற்றது.
இதில் 46 ஓட்டங்களுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் மத்தியூஸ் மேலதிய ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்க மறுமுனையில் 106 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மஹேல ஜெயவர்த்தன மேலும் 23 ஓட்டங்க ளைப்பெற்ற வேளையில் அரங்கு திரும்பினார்.
தொடர்ந்து ஏனைய விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து பறிபோக இலங்கை அணியின் முதல் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து நேற்றைய நாளிலேயே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ் தான் ஆட் ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.
குரான் மன்சூர் (6), அஹ ட்செஷாட் (9) முகமட் ஹபீஸ் (1) ஆகி யோர் அணி 19 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த டுத்து அரங்கு திரும்ப ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் (62)-–மிஸ்பா உல் ஹக் (53) ஆகியோர் 113 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சரிவிலிருந்து நிமிர்த்த நேற்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததது.
19 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஆரம்பமே தடுமாறிய அவ்வணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை-– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் நடைபெற்று வருகின்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் அனைத்தையும் முதல் நாளிலேயே பறித்த இலங்கை அணி அதன் முதல் இனிங்ஸில் 165 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவந்தது.
பின்னர் பதிலுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்று முன்தினம் 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.
இந்நிலையில் போட்டியின் 3 ஆவது நாளான நேற்று மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 70 ஓட்டங்களைப் பெறுவதற்குள் மீதி விக்கெட்டுக்கள் அனைத்தையும் இழந்து முதல் இனிங்ஸுக்காக 388 ஓட்டங்களைப்பெற்றது.
இதில் 46 ஓட்டங்களுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் மத்தியூஸ் மேலதிய ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழக்க மறுமுனையில் 106 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மஹேல ஜெயவர்த்தன மேலும் 23 ஓட்டங்க ளைப்பெற்ற வேளையில் அரங்கு திரும்பினார்.
தொடர்ந்து ஏனைய விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து பறிபோக இலங்கை அணியின் முதல் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து நேற்றைய நாளிலேயே தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ் தான் ஆட் ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.
குரான் மன்சூர் (6), அஹ ட்செஷாட் (9) முகமட் ஹபீஸ் (1) ஆகி யோர் அணி 19 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த டுத்து அரங்கு திரும்ப ஜோடி சேர்ந்த யூனிஸ்கான் (62)-–மிஸ்பா உல் ஹக் (53) ஆகியோர் 113 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சரிவிலிருந்து நிமிர்த்த நேற்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததது.


0 Comments