(சிங்கப்பூரிலிருந்து நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக சிங்கப்பூர் தொ பாயோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற நேஷன்ஸ் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் 65 : 49 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை வெற்றிபெற்றது.

ஆறு நாடுகள் பங்குபற்றும் இப் போட்டியில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளஇலங்கை இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இரண்டில் தோல்வியைத் தழுவியது.
அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் முதலாவது ஆட்ட நேரப் பகுதியில் பல தவறுகளை இழைத்த இலங்கை அணி அப் பகுதி நிறைவின்போது 13 : 17 என பின்னிலையில் இருந்தது.
ஆனால் இரண்டாவது பகுதியில் தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடிய இலங்கை அணி முதல் தடவையாக சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடுவதை அவதானிக்க முடிந்தது. இந்தப் பகுதி நிறைவின்போது இலங்கை 21 : 10 என முன்னிலை பெற்றது. இதன் பிரகாரம் 34 : 27 என 7
கோல்கள் வித்தியாசத்தில் இடைவேளையை இலங்கை எதிர்கொண்டது.
இடைவேளையின் பின்னர் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி அப் பகுதியில் இலகுவாக 16 : 9 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் இரண்டு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடியதுடன் போட்டியில் விறுவிறுப்புத்தன்மை காணப்பட்டது. இறுதியில் அப் பகுதியிலும் 15 : 13 என முன்னிலை பெற்ற இலங்கை இறுதியில் 65 : 49 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆறு நாடுகள் பங்குபற்றும் நேஷன்ஸ் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பப்புவா நியூகினியிடம் தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் அமெரிக்க அணியை 67 : 37 கோல்களால் வென்றது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை நடப்பு ஆசிய சம்பியனான சிங்கப்பூர் அணி 60 : 43 கோல்களால் வென்றது.
இச்சுற்றுப்போட்டியின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் ஓய்வு நாளாகும்.
நாளைய தினம் கடைசி லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அப் போட்டிகளின் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான போட்டியும் அணிகளை நிரல்படுத்தும் போட்டிகளும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளன.

ஆறு நாடுகள் பங்குபற்றும் இப் போட்டியில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளஇலங்கை இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இரண்டில் தோல்வியைத் தழுவியது.
அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் முதலாவது ஆட்ட நேரப் பகுதியில் பல தவறுகளை இழைத்த இலங்கை அணி அப் பகுதி நிறைவின்போது 13 : 17 என பின்னிலையில் இருந்தது.
ஆனால் இரண்டாவது பகுதியில் தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடிய இலங்கை அணி முதல் தடவையாக சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடுவதை அவதானிக்க முடிந்தது. இந்தப் பகுதி நிறைவின்போது இலங்கை 21 : 10 என முன்னிலை பெற்றது. இதன் பிரகாரம் 34 : 27 என 7
கோல்கள் வித்தியாசத்தில் இடைவேளையை இலங்கை எதிர்கொண்டது.
இடைவேளையின் பின்னர் திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி அப் பகுதியில் இலகுவாக 16 : 9 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் இரண்டு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடியதுடன் போட்டியில் விறுவிறுப்புத்தன்மை காணப்பட்டது. இறுதியில் அப் பகுதியிலும் 15 : 13 என முன்னிலை பெற்ற இலங்கை இறுதியில் 65 : 49 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆறு நாடுகள் பங்குபற்றும் நேஷன்ஸ் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் பப்புவா நியூகினியிடம் தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் அமெரிக்க அணியை 67 : 37 கோல்களால் வென்றது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை நடப்பு ஆசிய சம்பியனான சிங்கப்பூர் அணி 60 : 43 கோல்களால் வென்றது.
இச்சுற்றுப்போட்டியின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் ஓய்வு நாளாகும்.
நாளைய தினம் கடைசி லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அப் போட்டிகளின் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான போட்டியும் அணிகளை நிரல்படுத்தும் போட்டிகளும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளன.
0 Comments