வாகனத்தை ஒற்றை கையால் செலுத்தினால் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து
செய்யப்படும் என்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பீ.இரத்னாயக்க
தெரிவித்தார்.மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு கையில் கையடக்க தொலைப்பேசியை வைத்துக்குகொண்டு மற்ற கையால் மட்டுமே வாகனத்தை செலுத்துவதனால் பல்வேறு விபத்துகளும் அனர்த்தங்களும் அண்மைய காலங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments