ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூரிய கிரகணம் ஏற்படும் என வானியல்
ஆய்வாளர் அனுர சி. பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்கு மிக நெருக்கமாக தற்போது சூரியன் பயணிப்பதனால் சூரிய கிரகணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று அவர் அநுர சி. பெரேரா தெரிவித்தார்.

இச்சூரியக் கிரகணமானது உலக  காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துமென்பதுவதுடன் பூமியின் ஒரு பகுதி மழையுடன் கூடிய காலநிலையையும்  மற்றைய பகுதி வறட்சியுடன் கூடிய காலநிலையையும் கொண்டதாக இறக்குமென சி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஐசோன் விண்கற்கள் சூரியனுக்கு நெருக்கமாக பயணிப்பதனால் விண்கற்கள் வெடித்து எஞ்சிய பகுதியை காணக்கூடிய நிலையும் உருவாகுமென ஆய்வாளர் அநுர சி.பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.