Subscribe Us

header ads

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்

(ஆர்.ரஞ்ஜன்)
 
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 9 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
 
இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். 
 
ஹட்டன் நகர சபையின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் சமயத்தலைவர்கள் நகர சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள், ஊழியர்கள், அட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.
 
 




Post a Comment

0 Comments