Subscribe Us

header ads

10,000 வருடங்களுக்கு முந்தைய குடியிருப்புத் தொகுதி (படங்கள் இணைப்பு)

பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய குடியிருப்புத் தொகுதியின் சிதைவுகள் இஸ்ரேலின் ஜெருஸலேம் நகருக்கு அருகில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பழைய குடியிருப்புத் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மனிதகுல அபிவிருத்தி வரலாறு தொடர்பான மிக ஆர்வத்திற்குரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இது விளங்குகிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேற்படி காலப்பகுதிவரை உணவுக்காக  மனிதர்கள்; இடத்துக்கிடம் குடிபெயர்ந்துக் கொண்டிருந்தனர். எனவே இக்கட்டடம்  புதியதொரு அம்சமாகும் என மேற்படி அகழ்வாராய்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.  

இதில் வசித்தவர்கள் கோடாரிகள் போன்ற தமது ஆயுதங்களை மிகப் பெறுமதியானதாக மதித்துள்ளனர். இன்றைய மனிதர்கள் செல்லிடத் தொலைபேசிகள், கணினிகள் இல்லாமல் இருக்க முடியாதெனக் கூறுவதைப் போல் அக்காலத்தவர்களுக்கு கோடாரிகள் போன்றவை முக்கியமானவையாக இருந்துள்ளன என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இக்குடியிருப்புத் தொகுதி திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்பட்டிருந்ததாகவும்
தெரிவிக்கப்படுpகறது. 'நகரத் திட்டமிடலையும் குடியிருப்புத் தொகுதி தலைமையின் வழிகாட்டலையும் நாம் தெளிவாக உணர முடிகிறது' என அகழ்வாராய்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி அமீர் கோலானி கூறியுள்ளார்.






Post a Comment

0 Comments