Subscribe Us

செல்லப் பிரா­ணி­

(சிலாபம் திண்­ண­னூரான்)
பலர் தமது வீடு­களின் செல்லப் பிரா­ணி­யாக நாய்­களை வளர்க்­கின்­றனர். இன்று பல நாய்­களின் விலைகள் மூன்று இலட்சம் ரூபா­வையும் கடந்­து­விட்­டன.


புல்டோ பொஞ்சா, வுல்­மஸ்டிப், டெல்­மேசன், ஜேர்மன் ஜெப்பர்ட், சைப்­பீ­ரியன், அஸ்க்கி, லெப்­ராடர், டெஸ்ஹன், பீஹிஸ், கொம­னே­ரியன் ஸ்பக், ரொட்­வெய்லர், வோல்டன், ரெட்­றீலர் என நாய்­களின் இனத்தின் பல்­வேறு பிரிவு வகைகள் உண்டு. இவ் இனங்­களின் பெரும் சாத­னை­க­ளையும் வீர தீரச் செயல்­களைக் கொண்ட நாய் வகை­களும் உள்­ளன. எமது நாட்­டிலும் நாய் இனத்­திற்­கென தனி விற்­பனை நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.


மனி­த­னுக்கு பிறப்புச் சான்­றிதழ், அடை­யாள அட்டை, மருத்­து­வர்கள், நலன்­புரிச் சங்­கங்கள் உள்­ளவை போன்று நாய்­க­ளுக் கும் உள்­ளன. நாய்­க­ளுக்­கான விடு­திகள், வார்ட்­டு­களில் தங்கி மருத்­துவ சிகிச்சை பெறும் மருத்­து­வ­மனை, விளை­யாட்டுபயிற்­று­விப்­பாளர், Ceylon Kennel Club, Pet Boarding, Kennel Association
of Sri Lanka போன்ற அமைப்புகளும் எமது நாட்டில் நாய்­க­ளுக்­கென இயங்­கு­கின்­றன. மனி­தர்­க­ளுக்­கான அனைத்து சலு­கை­களில் 75 வீத­மா­னவை இன்று நாய்­க­ளு­க்கும் உரி­மை­யா­கி­விட்­டன.


மனி­தனின் மருந்து வகை­க­ளையும் உணவு வகை­க­ளையும் விட நாய்­களின் மருந்தும் உணவும் விலைக்­கூ­டி­யவை மட்­டு­மல்ல தர­மா­ன­வை­யு­மாகும். இந்த 21 ஆம் நூற்­றாண்­டிலும்  மனி­த­னை­விட நாய் பெரும் செல்­வாக்­கோடு வாழ்­கின்­றது.


காரணம் விஞ்­ஞான வளர்ச்­சியால் மனி தன் பாதிக்­கப்­பட்டு விட்டான். முற்­றாக அவ­னது கலை, கலா­சாரம், பண்­பா­டுகள் மாற்றம் பெறு­கின்­றன. ஆனால் அன்றும், இன்றும் நாய் இனம் மனிதன் இனத்­துக்கு விசு­வா­ச­மாக, கண்­ணி­ய­முள்ள நன்­றி­யுள்ள மிரு­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.


மனி­த­னை­விட பல்­வேறு தகை­ மை­களைக் கொண்ட நாய்­க­ளுக்­கென கொழும்பு, மட்­டக்­கு­ளி யின் காக்­கைத்­தீவு பிர­தே­சத்தில் மயா னம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.


எந்த நீதி­மன்­றத்­திலும் விசு­வாசப் பிர­மாணம் எடுக்­காத தங்­களின் பொறுப்பு வாய்ந்த நம்­பிக்­கைக்­கு­ரிய செல்லப் பிரா­ணி­யான நாய்­க­ளுக்கு, சில நல்ல உள்­ளங்கள் இணைந்து, தங்­களின் நாய் தனது வாழ்க்­கையின் பய­ணத்தை முற்­று­விக்கும் ஒரு முற்­றுப்­புள்­ளி­யான மரணத்தை தழு­வி­யதன் பின்னர் அடக்கம் செய்­வ­தற்­காக காக்­கைத்­தீவின் கட­லோ­ரத்தில் இச் சௌந்­த­  ரிய மயா­னத்தை அமைத்­துள்­ளனர்.


காக்­கைத்­தீவு கடற்­கரைத் திடலில் கடல் அலை­க­ளோடு சனி, ஞாயிறு தினங்­களில் மக்கள் கூட்­டமும் அலை­மோதும். இம் மக்கள் கூட்­டத்தின் பார்­வையில் செல்லப் பிரா­ணி­யான நாய்­களின் மயானம் விழுந்­ததும் வியப்­போடு தங்­க ளின் மூக்கில் விரலை வைத்து அதி­ச­ய­மாக மயா­னத்தை பார்­வை­யி­டுவர்.



காக்­கைத்­தீவைச் சுற்­றி­ பெரும் வீட­மைப் புத் திட்டம் உள்­ளது. இவ் வீட­மைப்புத் திட்­டத்தின் குடி­யி­ருப்­பா­ளர்கள் இணைந்து காக்­கைத்­தீவு சுற்றுச் சூழலை பாது­காப்­ப­தற்­காக 2006  ஆம் ஆண்டில் காக்­கைத்­தீவு கடற்­கரை பூங்கா சங்கம் என்றப் பெயரில் ஒரு அமைப்பை அமைத்­தனர்.


இவ் வீட­மைப்புத் திட்­டத்தில் குடி­யி­ருப்­பா­ள­ராக வசிக்கும் பொரு­ளா­தார
அபி­வி­ருத்தி அமைச் சின் மேல­திக செய­லா­ள­ரான சாந்த பண்­டா­ரவே இவ் அமைப்புத் திட்டத்தை ஆரம்­பித்தார். இச் சங்­கத்தில் மூவின மக்­களும் அங்­கத்­த­வர்­க­ளாக உள்­ளனர்.


இன்று இச் சங்கம் காக்­கைத்­தீவில் பல பாரிய வேலைத் திட்­டங்­களை முன்­னெ ­டுத்து வரு­கின்­றது. விடு­முறை நாட்­களில் காக்­கைத்­தீவு கடற்­கரை பிர­தேசம் சுற்­றுலா மையத்தைப் போன்று மக்­களால் நிறைந்து காணப்­படும்.



இந்­நி­லை­யி­லேயே 2010 ஆம் ஆண்டில் காக்­கைத்­தீவின் கடற்­கரை பூமியில் நாய்­களுக்­கான மயானம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இம் மயா­னத்­துக்­கென தனி­யா­னதோர் இணை­யத்­த­ளமும் ஆரம்­பிக்­கப்­பட்­டது. பல நாடு­க­ளி­லி­ருந்து இம் மயா­னத்தின் சிறப்பை உணர்ந்த பலர் இணை­யத்­த­ளத் தின் வாயி­லாக அறிந்து உதவ முன்­வந்­தனர்.


இருந்தும் காக்­கைத்­தீவு கடற்­கரை பூங்கா சங்கம் அவ் உத­வி­களை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரி­விக்­க­வில்லை. சங்­கத்தின் மூல­மா­கவே இப்­பூங்­கா­வி­னதும் மயா­னத்­தையும் அபி­வி­ருத்திப் பாதையில் கொண்டுச் செல்ல செயல்­ப­டு­கின்­றனர்.



இச் சங்­கத்தின் முன்னாள் தலைவர் பெட் ரம் மாஸ், நாய்­க­ளுக்­கான மயா­னத்தை உயர் நிலைக்கு இழுத்துச் செல்­வ­தற்­கான முழு ஒத்­து­ழைப்­பையும் வழங்கி வரு­கின் றார். தனது நிதியில் இம் மயா­னத்தில் செல்ல நாய் உருவ சிலை­யுடன் இணைந்த நினைவுத் தூபி ஒன்றை நிர்­மா­ணித்­துள்ளார்.


சிறந்த கலை அம்­சத்­துடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­ள்ள இத் தூபியின் Pets Rest 2010 என ஆங்­கி­லத்தில் தன் அன்பை வெளிப்­ப­டுத்தி உள்ளார். இம் மயா­னத்தின் சிறப்­பம்­சமே இந்­நி­னைவுத் தூபிதான்.


உல­கத்தில் நன்றி மறக்கும் மனி­தர்கள், வளர்த்­த­வ­னையே தூற்­று­வார்கள் என்­ப தால் வாயைக் கட்டி நாயைப் படைத்­தாயா இறைவா? என இச்­சிலை உரு­வான நாயைப் பார்த்­ததும் மனதில் எண்ணத் தோன்றும். இது­வரை இம் மயா­னத்தில் நூற்­றுக்கும் மேற்­பட்ட செல்ல நாய்­களின் பூத­வுடல் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.



இம்­ம­யா­னத்தில் அடக்கம் செய்­யப்­படும் நாய்­க­ளுக்கு இறு­தி­யான சமயச் சடங்­கு­களும் கிரி­யை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. சிலர் தங்­களின் பாச­மான பிரா­ணியின் நினைவு தினத்­தன்று இப்­பூங்­காவில் காணப்­படும் நாய்­க­ளுக்கு நினைவு தினத்­தன்று இப்­பூங்­காவில் காணப்­படும் நாய்­க­ளுக்கு விசே­ட­மாக உணவு தயா­ரித்து உன்­ன­தான நிகழ்­வு­களும் இடம்­பெ­று­கின்­றன. இந்­நி­கழ்வில் நாய்கள் மாத்­தி­ரமே கலந்து கொள்ளும்.



இம் மயா­னத்தில் நாய்­களின் பிரேதம் அடக்கம் செய்ய வரு­கையில் பலர் துயரம் தாளாமல் அழுது புலம்பிக் கொண்டு வரு­வ­தையும் காணலாம். வயது வித்­தி­யாசம் இல்­லாது பெரும் சத்­தத்­தோடு அழுது புலம்­பு­வதை காண்­போ­ரையும் துயரம் மிரட்டும். இதற்கு முக்­கிய காரணம் மனி­தனால் பேசவும் சிரிக்­கவும் இயலும். செல்லப் பிரா­ணி­யான நாயால் பேசவும் முடி­யாது சிரிக்­கவும் இய­லாது.



எல்­லா­வற்­றிற்கும் மேலாக நன்­றி­யுள்ள நாய் தன் எஜ­மானின் குடும்­பத்தின் மீது வைத்­தி­ருந்த விலை­ம­திப்­பற்ற பாச­மே­யாகும். ராஜ­கி­ரி­யவில் முப்­பது
வரு­ட­ங்களாக வசிக்கும் இங்­கி­லாந்தைச் சேர்ந்த பெண்­ம­ணி­யொ­ருவர்,  அண்­மையில்  தனது செல்ல நாய் மர­ணத்தை எட்­டி­யதன் பின்னர் இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக காக்­கைத்­தீவு மயானம் பற்றி அறிந்து, இம் மயா­னத்தில் அடக்­கம செய்­துள்ளார்.


 அடக்கம் செய்யும் முன்­னரும் பின்­னரும் சமய வழி­பா­டு­க­ளையும் இவரின் குடும்பம் மயா­னத்தில் நடத்­தி­யுள்­ளது. இறு­தியில் மயா­னத்தை விட்டு வெளி­யே­று­கையில், முழுக் குடும்­பமும் தேம்பி, தேம்பி அழுதுள்­ளனர். பின்னர் அங்கு கூடி நின்றோர் சமா­தானம் கூறி அனுப்பி வைத்­துள்­ளனர். பாருங்கள்... மனி­தர்­ளையும் நாய்கள் அழ வைக்­கின்­றன.


இவ்­வாறு பல்­வேறு புது­மை­களை உள்­வாங்­கிய நிலையில் இம்­ம­யானம்
காணப்­ப­டு­கின்­றது. காக்கைத் தீவு கடற்­கரை பூங்கா சங்­கத்தின் தலை­வ­ராக வர்த்­தகர் வசந்த முன­வீ­ரவும் செய­லா­ள­ராக முன்னாள் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிமல் பெரே­ராவும் பொரு­ளா­ள­ராக வரு­மா­ன­வரி ஆலோ­சகர் ஆர். நாகேஷ்­வ­ரனும் செயலாற்றுகின்றனர்.


எதிர்காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப இம் மயானம் விஸ்தரிக்கப்படுவதுடன் கடற்கரை பிரதேசம்பெரியோர்களும் சிறுவர்களும் பொழுதை கழிப்பதற்கேற்ற வகையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இச்சங்கம் தெரிவிக் கின்றது.



மரணம் என்பது மன வலிமைக்கான மன்னிப்புக் குரல் அல்ல. மயானத்தை அழைக்கும் மர்மக்குரல். செல்லப் பிராணிகளான நாய், பூனை மரணத்தை எட்டியதும் மரியாதையோடு அப்பிராணிகளின் n அடக்கம் செய்ய அழகிய பூங்காவுடன் கூடிய மயானம் அமைத்து சுற்றி மதில் எழுப்பி, அழகுபார்க்கும் காக்கைத்தீவு கடற்கரைப் பூங்கா சங்கத்தினரை பலரும் பாராட்டுகின்றனர்.
      

(சிலாபம் திண்­ண­னூரான்)
பலர் தமது வீடு­களின் செல்லப் பிரா­ணி­யாக நாய்­களை வளர்க்­கின்­றனர். இன்று பல நாய்­களின் விலைகள் மூன்று இலட்சம் ரூபா­வையும் கடந்­து­விட்­டன.

புல்டோ பொஞ்சா, வுல்­மஸ்டிப், டெல்­மேசன், ஜேர்மன் ஜெப்பர்ட், சைப்­பீ­ரியன், அஸ்க்கி, லெப்­ராடர், டெஸ்ஹன், பீஹிஸ், கொம­னே­ரியன் ஸ்பக், ரொட்­வெய்லர், வோல்டன், ரெட்­றீலர் என நாய்­களின் இனத்தின் பல்­வேறு பிரிவு வகைகள் உண்டு. இவ் இனங்­களின் பெரும் சாத­னை­க­ளையும் வீர தீரச் செயல்­களைக் கொண்ட நாய் வகை­களும் உள்­ளன. எமது நாட்­டிலும் நாய் இனத்­திற்­கென தனி விற்­பனை நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

மனி­த­னுக்கு பிறப்புச் சான்­றிதழ், அடை­யாள அட்டை, மருத்­து­வர்கள், நலன்­புரிச் சங்­கங்கள் உள்­ளவை போன்று நாய்­க­ளுக் கும் உள்­ளன. நாய்­க­ளுக்­கான விடு­திகள், வார்ட்­டு­களில் தங்கி மருத்­துவ சிகிச்சை பெறும் மருத்­து­வ­மனை, விளை­யாட்டு பயிற்­று­விப்­பாளர், Ceylon Kennel Club, Pet Boarding, Kennel Association of Sri Lanka போன்ற அமைப்புகளும் எமது நாட்டில் நாய்­க­ளுக்­கென இயங்­கு­கின்­றன. மனி­தர்­க­ளுக்­கான அனைத்து சலு­கை­களில் 75 வீத­மா­னவை இன்று நாய்­க­ளு­க்கும் உரி­மை­யா­கி­விட்­டன.

மனி­தனின் மருந்து வகை­க­ளையும் உணவு வகை­க­ளையும் விட நாய்­களின் மருந்தும் உணவும் விலைக்­கூ­டி­யவை மட்­டு­மல்ல தர­மா­ன­வை­யு­மாகும். இந்த 21 ஆம் நூற்­றாண்­டிலும் மனி­த­னை­விட நாய் பெரும் செல்­வாக்­கோடு வாழ்­கின்­றது.

காரணம் விஞ்­ஞான வளர்ச்­சியால் மனி தன் பாதிக்­கப்­பட்டு விட்டான். முற்­றாக அவ­னது கலை, கலா­சாரம், பண்­பா­டுகள் மாற்றம் பெறு­கின்­றன. ஆனால் அன்றும், இன்றும் நாய் இனம் மனிதன் இனத்­துக்கு விசு­வா­ச­மாக, கண்­ணி­ய­முள்ள நன்­றி­யுள்ள மிரு­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

மனி­த­னை­விட பல்­வேறு தகை­ மை­களைக் கொண்ட நாய்­க­ளுக்­கென கொழும்பு, மட்­டக்­கு­ளி யின் காக்­கைத்­தீவு பிர­தே­சத்தில் மயா னம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=38&display=0#sthash.2G1k1wxh.dpuf

Post a Comment

0 Comments