Subscribe Us

header ads

மனிதர்களிடம் வெரும் வேசம் !ஆனால் நாய்க்குட்டியின் சகோதர பாசம்!

(ஜீஷான் அசீர்)

கார் ஒன்றால் மோதுண்டு உயி­ரி­ழந்த தனது சகோ­த­ரி­யான பெண் நாயின் உட­லுக்கு அருகில் நாய்க்­குட்­டி­யொன்று இரு நாட்­க­ளாக துய­ரத்­துடன் காவ­லி­ருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் தென்­மேற்கு சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
சிசுவான் மாகா­ணத்தில் பிக்ஸியன் நகரில் உயி­ரி­ழந்த மேற்­படி பெண் நாயின் உடலை விட்டு அகல மறுத்து இரு நாட்­க­ளாக அந்த நாய்க்­குட்டி காவல் இருந்துள்ளது.
அந்த வழி­யாக சென்ற கார்கள் நாயின் சட­லத்தின் மீது மீளவும் மோதாமல் தடுக்கும் முக­மாக, நாய்க்­குட்டி அந்தக் கார்­களை நோக்கி குரைத்து அவற்றை திசை திருப்பும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது
நாய்க்­குட்­டியின் பரி­தாப நிலையை அவ­தா­னித்த பிர­தே­ச­வா­சி­யொ­ருவர் இறந்த நாயை குழி­யொன்றை தோண்டி புதைக்க முயன்ற போது, குழிக்குள் இருந்த நாயின் சட­லத்தின் மீது குதித்த நாய்க்­குட்டி அங்­கி­ருந்து நகர மறுத்­துள்­ளது.
இந்­நி­லையில் பிர­தேசவாசிகள் பெரும் போராட்­டத்தின் மத்­தியில் நாய்க்­குட்­டியை அங்­கி­ருந்து வெளி­யேற்றி இறந்த நாயை மண்ணால் மூடினர்.
இத­னை­ய­டுத்து அந்த நாய்க்­குட்டி உள்ளூர் மிருக பாது­காப்பு நிலை­யத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பராமரிப்பின் கீழ் வாழ்வதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments