Subscribe Us

header ads

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. ஏன்? எதற்காக?

 


அது எகிப்தின் றாபியா பள்ளிவாயல் நள்ளிரவு துவங்கி அதிகாலை மெல்ல ,மெல்ல புலறும் நேரம் .பல்லாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனநாயாக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை இராணுவப் புரட்சியின் மூலம் அகற்றியதை எதிர்த்து மக்கள் இருந்த இடத்தில் இருந்து ஆர்ப்பாட்ட காரர்கள் அதிகாலை தொழுகையை (தஹஜ்ஜத் ) ஆரம்பிக்கும் நேரம் .எகிப்திய இராணுவ ஆட்சியாளர்கள் மிகவும் திட்டமிட்டு ஆர்ப்பாட்ட காரர்ரகள் இடையே தமது ஏஜன்டுகளை சிவில் உடையில் அனுப்புகின்றனர் .அந்த ஏஜன்டுகள் பாதுகாப்பில் இருந்து பாதுகாப்பு படைகள் மீது கற்களை ஏரிய ஆரம்பிக்கின்றனர்.தூர இருந்த ஏஜன்டுகள் ஆர்ப்பாட்ட காரர்கள் மீது Sniper மூலம் தாக்குதல் ஆரம்பிக்கின்றனர் .அதே ஏஜன்டுகள் பாதுகாப்பு படை மீதும் தாக்குதலை ஆரம்பிக்கின்றனர் .நிலமை படு பயங்கரமாக மாறுகிறது .றாபியா அதவியா பள்ளிவாயல் இரத்தக் கரையாக மாறுகிறது .இவை கற்பனை அல்ல அறபு வசந்த போராட்டத்தை துல்லியமாக அவதானித்த உண்மையான சம்பவம்.அந்த நிலையை அல் ஜெஸீராவில் Live ஆக பார்த்த எனக்கு பல நாட்கள் ஒழுங்காக தூக்கம் கூட போகவில்லை. அவ்வளவு பயங்கர அதிகாலைப் பொழுது அது .பின்புதான் தெரிய வந்தது அவ்வளவும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் ,CIA திட்டமிட்டு நிகழ்த்திய கொடுமை அது என.அறபு வசந்தத்தை மேலத்தேய சக்திகள் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு பயன்படுத்தினர்.


அடுத்த சம்பவம் இலங்கையில் ஆர்ப்பாடம் பல இடங்களில் நடக்கும் போது சில இடங்களில் பலர் இனந்தெரியாத நபர்களால் வால் வீச்சிக்கு உற்பட்டுள்ளனர் .இன்று காலை புலறும் போது இலங்கையில் அரசு இல்லாதது போன்ற உணர்வு மொத்த நாட்டு மக்களுக்கும் .நாடாளுமன்றத்தில் ஆளும் எதிர்கட்சிகள் அனல் பறக்க சத்தம் போடும் போது .ஆர்ப்பாட்ட காரர்கள் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்கின்றனர் .பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடும் போது இலக்க தகடு இல்லாத மோட்டார் சைக்களில் பிசாசு போன்ற உடையணிந்த முற்றிலும் ஆயுதம் தரித்த ஒரு கோஷ்டி நாடாளுமன்றத்தை நோக்கி வரும் போது பொலிசார் தடுத்து நிறுத்துகின்றனர்.ஆனால் வந்த பாதையிரல் திரும்பிச் செல்கின்றனர்.

இப்போது நாடு எங்கும் ஒழுங்குபடுத்தப்படாத ஆரப்பாட்டல்கள் நடக்கின்றன நாம் ஒன்றை தெளிவாக உணர வேண்டும் எமது நாட்டில் பல நாட்டு உளவுப் பிரிவுகள் தொழிற்பட நிறைய வாய்ப்பு உள்ளது .அவர்களிடம் நிகழ்ச்சி நிரல் உள்ளது.எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி இந்த நிலை தொடர்பில் கூடுதல் கவனம் எடுக்காது  விடின் பாரிய இரத்தக்களரியை தடுப்பது கடினமாகும்.


தலைமைத்துவம் இல்லாத ,ஒழுங்கமைக்கப்படாத ஆர்ப்பாட்டங்களில் நின்றும் மக்கள் தூரமாகி இருக்க வேண்டும்.எமது பாதுகாப்பை நாமே பார்த்துக் கொள்வோம் என்ற முன்னால் அமைச்சர்களின் கதையில் உள்ள ஆபத்தை உணர வேண்டும்.


 குற்றவாளிகள் எப்படியாவது தப்பிச் செல்ல வழியைத் தேடுவர் என்பதே உலக வரலாறு .

தேசம் ஒரு முக்கிய சந்தியில் நகர முடியாமல் நிற்கிறது சிவில் சமூகத்தை புத்திஜீவிகள் அவசரமாக வழிநடாத்தி பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் .


எம்.என் முஹம்மத்.

Post a Comment

0 Comments