Subscribe Us

header ads

"தீர்வு" நிகழ்ச்சியில் - ஹரீஸ் எம்பி மூதூர் குறித்து கூறியதே உண்மை ! ரிஷாத் பதியுதீனும் மறுக்க மாட்டார்.. ஊடகவியலாளராக நான் அறிவேன்..

 - ஏ.எச்.எம்.பூமுதீன் -


ஹரீஸ் எம்பி - கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வசந்தம் தொலைக்காட்சியின் தீர்வு நிகழ்ச்சியில், ஒரு கட்டத்தில் - மூதூர் 2002 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் சுற்றிவளைக்கப்பட்ட போது தானும் முன்னாள் எம்பி மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் களமிறங்கி மூதுரை பாதுகாத்தோம் என்று கூறினார்.

இந்த விவகாரம் தற்போது - முகநூலில் பேசு பொருளாக மாறியுள்ளது.

முகா - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் - அப்போது அரசியலில் யாரென்றே தெரியாது. ஆனால் , அவர் - ஹரீஸ் எம்பி யின் கருத்தை - தனது முகநூலில் மறுதலித்து , தனது கற்பனையான பொய்யை இட்டுக்கட்டி பதிவேற்றி உள்ளார்.

இங்கு , எனக்கு ஹரீஸ் எம்பி முக்கியமல்ல. ஆனால், ஹரீஸ் எம்பி கூறியதே உண்மை.

இதனை என்னால் இரண்டு விடயங்களில் உறுதிப்படுத்த முடியும்.

# முதலாவது - நான் , மூதூர் சம்பவம் நடக்கும் போது நவமணி தேசிய வார இதழில் அலுவலக ஊடகவியலாளர். மூதூர் சம்பவ செய்திகளை சேகரிக்கும் பொறுப்பை - அப்போது பத்திரிகை ஆசிரியராக இருந்த மர்ஹூம் எம்.பி.எம். அஸ்ஹர் என்னிடமே ஒப்படைத்திருந்தார். அந்தவகையில் , ஹரீஸ் எம்பி கூறியதே உண்மை.

# இரண்டாவது - ரிஷாத் பதியுதீன் , ஹரீஸ் மற்றும் அன்வர் இஸ்மாயில் ஆகிய எம்பிக்களுடன் அப்போதே மிகவும் நெருக்கமான உறவு எனக்கு இருந்தது. மூதூர் சம்பவங்களை அவர்களிடம் இருந்தே உடனுக்குடன் அறிந்து கொள்வேன். அந்தவகையில் , ஹரீஸ் எம்பி கூறியதே நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என்பதை - அன்றிருந்த என்னைப் போன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மூதூர் மக்களைத் தவிர வேறு எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தீர்வு நிகழ்ச்சியில் - ஹரீஸ் எம்பி கூறிய மேற்படி 3 எம்பீக்களில் அன்வர் இஸ்மாயில் மரணித்து விட்டார். இப்போது , உயிரோடு இருப்பது ரிஷாத் பதியுதீன் மட்டுமே.

நிச்சயமாக - ஹரீஸ் எம்பி கூறியதை - அப்போது எம்பியாக இருந்த இன்றைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் - ஒருபோதும் மறுதலிக்க மாட்டார் என்பதை என்னால் இங்கு உறுதியாக பதிவிட முடியும்.

அதேநேரம் - " ஹரீஸ் கூறியது உண்மை" என ரிஷாத் பதியுதீன் - நேற்று அவருக்கு இந்த விவகாரம் குறித்து - உண்மை விளக்கத்தை அறிய முற்பட்டோருக்கு கூறியுள்ளதாகவும் தனக்கு அறிய முடிகிறது..

இவ்வாறு - உண்மையும் சாட்சியமும் ஆதாரபூர்வமாக இருக்கும் போது - ஹரீஸ் எம்பி கூறியதை மறுதலிப்போர் - என்னைப் பொறுத்தவரை , மூதூர் சம்பவங்களை அறியாதோராகவே இருப்பர்.

அப்போது - பிரதமர் ரணில். அவர் , இந்த விவகாரத்தில் அசட்டையாக செயற்பட்டார். அவரது ஐ.தே.க.வை சேர்ந்தவர்தான் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன. ரணிலைப் போன்றே அவரும் அசட்டையாக செயற்பட்டார். அதனால்தான் ரிஷாத் பதியுதீன், ஹரீஸ் மற்றும் அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முப்படைகளின் தளபதியான - ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொடர்பு கொண்டு - மூதூர் மக்களை பாதுகாக்க உதவி வேண்டினர்.

Post a Comment

0 Comments