Subscribe Us

header ads

ஏன் நாட்டை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்..?

 


ஏன் நாட்டை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்..? அவுஸ்த்திரேலியாவில் ஒரு பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரை அடையாளம் கண்டதற்கு, அந்த பிராந்தியத்தை மூட நடவடிக்கை எடுத்ததை போல, ஏன் இங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறலாம் ?


அத்தியவசிய பொருட்களில் பல பொருட்களின் தட்டுப்பாடு நிலவுவதால் அரசாங்கம் எப்படியும் முழுமையான முடக்கத்திற்கு செல்ல இப்போதைக்கு வாய்ப்புகள் இல்லை.

பால்மா, சமையல் எரிவாயு, மருந்து பொருட்கள், என தட்டுப்பாடு நிலவுவதாலும்,சீனி 2 கிலோ, அரிசி 10 கிலோ மட்டுமே ஒரு நேரத்தில் கொள்வனவு செய்யலாம் என இருப்பதாலும் இப்போதைக்கு முழு நாட்டையும் முடக்குவது சாத்தியமில்லை.

இப்போழுது உள்ள நிலமையில் பல வீடுகளில் காலை உணவு, வெறும் “ டீ “ மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.

அடுத்த பக்கத்தில், சுகதார பணியாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கட்டுள்ளனர், நேற்றும் டீ சொய்சா வைத்தியசாலையின் பிரதான தாதி ஒருவர், கடந்த வாரம் கலிகமுவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு வைத்தியர் என தினமும் நாட்டின் எங்கோ ஒரு மூலை முடுக்கில் கொரோனா காரணமாக சுகாதார பணியாளர்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம்.

நாம் மாற வேண்டும், மக்கள் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், நம்மில் பலர் இன்னமும் முகக்கவசத்தை சரியாக இடுவதில்லை, நாடிக்கு தான் முகக்கவசத்தை அணிகிறார்கள் சமூக இடைவெளியை பேணுவதில் மிகுந்த பொடுபோக்கு, 30 வயதை அடைந்து, நேரம் இருந்தும், இதுவரை பலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

இரவு 10 மணியிலிருந்து,அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு வரும் திங்கள் முதல் அமுல்படுத்தபடுகிறது என செய்தி வந்ததும் அதனை பலர் நகைச்சுவைக்கு எடுத்திருந்தனர், ஜேர்மன் போன்ற நாடுகளில் கொரோனா கட்டுப்படுத்த இந்த முறையையையும் கையாண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை பொறுத்த வரை, இப்பொழுது உள்ள நெருக்கடி நிலமையில் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இந்த முடிவை கொஞ்சம் முற்கூட்டியே எடுத்திருந்தால் நல்லது. !

-Azeem Jahufar-

Post a Comment

0 Comments