வாழ்க்கையின் மகத்தான பயணத்தில் மனிதன் எனும் வெற்றிடத்தை நிரப்பும் அறிவு, அனுபவம், ஆற்றல், ஆகியவற்றின் தொகுப்பே ஈற்றில் அவர் பெற்ற கல்வி!
கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர். ஒருவர் அடைந்த கல்வியானது அவரது ஆளுமைக்கு, ஆற்றலுக்கு, வாழ்வாங்கு வாழும் வாழ்வியலுக்கு அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.
அடிப்படையில் சமூகத்தின் காவலனாய், சமூக முன்னேற்றத்தின் கலங்கரை விளக்காய் இருந்த நம் தலைவன், இந்த உலகம் சுழலும் அசுர வேகத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, நவீனங்களின் நல்வழியில், முன்னோடியாய் பயணித்த ஒருவன்! மரபு வழி அரசியல் கூச்சல்கள் சாபமாகிப்போன நம் நாட்டில், உலகத்தையே மாற்றிவரும் மதியூகத்தின் வழி அரசியலை செய்தவன் நம் தலைவன்!
கடந்த வருடம், 2020 நவம்பர் மாதம் 20ம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளான பொருளாதார மற்றும் சமூக ஆணையகம்(United Nations ESCAP), மனித தீர்வு திட்டம் (UN-Habitat), பல்கலைக்கழக நிறுவனங்கள் (UNU-IAS) (APRU), உள்ளுராட்சி நிறுவனங்களை வழிகாட்டும் அமைப்புகள் (UCLG-ASPAC) என பல சர்வதேச நிறுவங்களை ஒன்றாக சேர்ந்து இந்த உலகத்தில் இருக்கும் நகரத்தின் பிரதிநிதிகளுக்கான ஒரு பாடநெறியை ஆரம்பித்தது.
தெற்காசியாவில் இருந்து சுமார் 600க்கு மேற்பட்ட நகர முதல்வர்கள் விண்ணப்பித்த இந்தப் பாடநெறியில் (Asia Pacific Mayors Academy) தெரிவுசெய்யப்பட்ட 16 தலைவர்களில் நம் தலைவரும் ஒருவர்! உலகம் எதிர்க்கொள்ளும் நவயுகத்தின் சவால்களை எவ்வாறு முகம் கொடுப்பது? நிலையான அபிவிருத்தியை எதிர்கால திட்டமிடல்களை மையமாக வைத்து எவ்வாறு செய்வது?-என உலகத்தின் போக்கோடு நம் நகரத்தை கொண்டு செல்லத் தேவையான முழுமையான அறிவை இந்த பாடநெறியின் மூலம் பெற்றிருக்கிறார் நம் தலைவர்!
இந்தப் பாடநெறி முடிவடைந்து, உலகத்தில் இரண்டாம் இடத்தையும், தெற்காசியாவில் முதல் இடத்தையும் அவர் பெற்று எதிர்வரும் மாதமளவில் அவருக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்த நிலையில் நம்மை விட்டு புரிந்திருக்கிறார் நம் தலைவர்!
இந்தப் பாடநெறியின் மூலம், நமது நகருக்கு பல அபிவிருத்திகளை சர்வதேச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளத் தேவையான அத்தனை கதவுகளும் தலைவருக்கு திருந்திருந்த நிலையில் அவர் கொண்டு சென்ற முதல் திட்டம் தான் தலைவரின் பக்கத்தில் வெளியாகியிருந்த "கடையாக்குள மக்களின் கஷ்டங்களுக்கு தீர்வாக அமையும் ஒரு நாகரீக நகரம்".
நம் நகரத்தை பாதுகாத்து வழிநடத்துவது அவர் பொறுப்பாக இருந்தாலும், அதற்கான கல்வியைப் பெற்று சர்வதேச தொடர்புகளை வளர்த்து, உலகத்தின் அதிவேக பயணத்தில் நம் பிரதேசத்தை ஒன்றிணைக்க அவர் எடுத்த முயற்சியை இறைவன் பொருத்திக்கொள்ள வேண்டும்.
தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்த நம் தலைவர் நம் நகரின் கல்வியை அடுத்த நிலைக்கு வளரச்செய்தது மட்டுமல்லாமல், தன் கல்வி தகைமையை வளர்ப்பதிலும் பின்நிற்கவில்லை.
அந்த அடிப்படையில் மே 23ம் திகதி "புத்தளத்தின் கல்வி வளர்ச்சி தினம்" ஆகப் பிரகடணம் செய்து அனைத்து பாடசாலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் வருடாவருடம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய மிகப்பெரிய அவா! இதனை நம் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் முன்னின்று செய்ய வேண்டுமென தயவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #KABDay #Day4KAB #Puttalam #KAB #Leader
0 Comments