Subscribe Us

header ads

பெயர் பலகைகளிலிருந்தும், விமாணங்களிலிருந்து அரபு மொழியை நீக்க முயல்வது கையாலாகா காரியம்


இலங்கையில் சிங்களம் பேசுபவர்களை ”சிங்களவர்” எனப் பிரித்தார்கள், தமிழ் பேசுபவர்களை ”தமிழர்” என்றும் மூன்றாவது இனத்தை மட்டும் ”முஸ்லிம்கள்” என்றும் பிரித்தார்கள். இப்படிப் பிரித்தர்வளுக்கே இது புரியாத ஒன்று. இந்த மூன்றாம் ”சாதி” தமிழ் பேசுகிறது, அதிலும் ஒரு சிறு பிரிவுக்கு தாய் மொழி எப்படிப் போனாலும் ”சிங்களமும், ஆங்கிலமும்தான் வீட்டு மொழி. அப்புறம் இன்னும் ஒரு பிரிவு ”மலாயர்” என்று பிரிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இஸ்லாமியர் என்ற யதார்த்தத்துக்கு அப்பால் சிங்கள மொழியை தாய் மொழியாகவோ. வீட்டு மொழியாகவோ கொண்டாவர்கள். அவர்களை முஸ்லிம்கள் என்ற பிரிவிற்குள் சேர்க்கப்படுதில்லை.
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனித்துவமான மொழிக் கையாட்சியில் பல வகைகளில் தமிழ் பேசப்பட்டாலும் இந்த முஸ்லிம்களின் மொழிக் கையாட்சியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதுதான் அவர்கள் பேசும்போது பேச்சில் முழுக்க முழக்க அரபு இழையோடிக் கிடப்பது.
சிங்கள் மொழியை முழுக்க முழுக்க உபயோகிக்கும் ”மலாய்” சமுகமாகட்டும்> ஆங்கிலத்தை தமது வீட்டு மொழியாகக் கொண் முஸ்லிம்காளகட்டும் அல்லது இந் நாட்டின் முஸ்லிம் சமுகமாக இருக்கட்டும் அவர்களின் மொழிக் கையாட்சியில் அவர்கள் நூறு வார்தை பேசினால் குறைந்த பட்சம் இருபத்தைந்தாவது அரபு மொழிதான் பின்னிப் பிணைந்திருக்கும். அந்த வார்த்தைப் பிரயோகங்கள் ”அரபு” மொழி என்று கூடத் தெரியாமல் தமிழாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அரபு மொழியை இந்நாட்டில் அந்நியப்படுத்தும் பரிதாபத்துக்குரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ”நீயத்” என்று அரபியில் சொல்வார்கள். ”நாட்டம்” என மொழியெர்த்தால் அது சரியாக இருக்குமோ தெரியாது. முஸ்லிம்கள் பொதுவாக அவர்கள் ஆங்கிலம் பேசும் முஸ்லிம்காளவோ அல்லது சிங்களம் பேசும் மலாய் சமுகத்தவர்களாகவோ அல்லது ஒட்டு மொத்தமான இஸ்லாமிய சமுகத்தவரகளாகவே இருந்தாலும் அவர்கள் நமபிக்கை வைத்துள்ள மதத்தின் பெயரால் செய்யும் எதையும் அதை நமது இறைவனுக்காக மட்டும் என்று மனத்தில் ஒரு நாட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். நாட்டம் வைக்கும் நேரத்தில் வாயாலும் மெதுவாகச் சொல்லிக் கொள்கிறாரகள். நோன்பு நோற்பதற்கு> ஐங்காலத் தொழுகையை மேற்கொள்வதற்கு> ஹஜ் கடமைகளைச் செய்வதற்கு இப்படியெல்லாம் ஒவ்வொரு அம்சத்துக்கும் அவர்கள் மனதால் நினைக்கும்> வாயால் மெல்லமாக மொழியும் ஒவ்வொரு நாட்டமு் கட்டாயம் ”அரபு மொழி” யிலேயே செய்யப்படுகின்றன.
”பஸ்மில்லாஹ்”> ”அல்ஹம்து லில்லாஹ்”, ” இன்ஷா அல்லாஹ்” ”அஸ்லாமு அலைக்கும்” என்ற அரபு வார்தைப் பிரயோகம் 24 நான்கு மணித்தியாளமும் ஒலித்துக் கொண்டிருப்பதை முஸ்லிம்களுடன் நெருக்கமாகப் பழகும் ஏனை சமுகத்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சமுகத்திடம் இருக்கும் புனித குர் ஆனின் மற்றுமொரு அற்புதம்தான். அது இலட்சக் கணக்கானோரின் இதயங்களிலே முழுமையாகவோ> ஒரு பகுதியாகவோ பதிந்து கிடப்பது இருபத்து நான்கு மணித்தியாளமும் ஏதோ ஒரு வகையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. “புனித குர்ஆன் என்னுடையது. அதை நானே பாதுகாப்பேன்” என்றுதான் இறைவன் அந்த அருள் மறையில் கூறுகிறான். எனவே அதை புனித நூல் வடிவிலும்> மனப் பதிவிலும் வைத்து அவன் அதைப் பாதுகாக்கிறான். ஒவ்வொரு சிறு பிள்ளையும் கூட அதன் ஒரு பகுதியைாயவது மொழியும் திறமையைக் கொண்டிருப்பதும்> ஐந்து வயது நிரம்பிய நிலையிலும் கூட ஆங்காங்கு பிள்ளைகள் புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து வைத்திருப்பதும் குர்ஆனின் அற்புதங்களில் ஒன்று. உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்துக்கும் இல்லாத ஒரு மேன்மை இங்கு இருக்கிறது.
எனவே பெயர் பலகைகளிலிருந்தும்> விமாணங்களிலிருந்து அரபு மொழியை நீக்க முயல்வது கையாலாகா காரியம் அன்றி வேறில்லை.

newtan isacc

Post a Comment

0 Comments