எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் இருக்கும் சகோதரர் றிழ்வானுடன் , ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது
0 Comments