சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதால், குப்பை பிரச்சனை ஓர் இனத்தின் பிரச்சினையாய் காட்ட முயற்சிக்கப்படுவதால்,
கொழும்பு Vs புத்தளம் என்ற மாகாண இடைவெளி வெட்டி சிலர் தன் வாக்கு வயிறுகளை நிரப்பிக்கொள்ளத் துடிப்பதால்...
இந்த ஆக்கத்தை அவசரமாய் எழுத விழைகிறேன்...
நண்பர்களே... இந்த தாய் நாட்டை நேசிப்பவர்களே...
இது புத்தளப் பிரச்சினை அல்ல.. தேசியப் பிரச்சினை..! இந்த 200 நாளைத் தொடும் போராட்டம் இலங்கையின் ஒவ்வொரு உடன்பிறப்பினதும் உயிரோடு சம்பந்தப் பட்ட பிரச்சினை...!!
இந்தத் திட்டம் இவர்கள் சொல்வதுபோல், அருவக்காலு என்ற இடத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அருவக்காலு என்ற இடத்தில் செய்ய முட்பட்டபோது, "காட்டு வன விலங்குகளுக்கு" ஆபத்தானது என நிராகரிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா..?
அக்காட்டு விலங்குகளைவிட மிக அண்மையில் மனிதர்கள் வாழும் "சேரக்குழி" என்னும் மனிதக் குடியிருப்பில் தான் இது இப்போது அரங்கேறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அதிர்வில் வெடிக்கும் வீடுகளோடும்... பதரிக் கண்விழிக்கும் சிறார்களோடும்... அக்கிராமம் போலீசில் போட்டிருக்கின்ற புகார்கள் உங்களுக்குத் தெரியுமா..?
இத்திட்டத்திற்கு பணம் கொடுத்த உலக வாங்கி அதனை கோபாத்துடன் திருப்பி வாங்கிக்கொண்ட கதை..!
எந்த முன் அனுபவமும் அற்ற, ஒரு Black listed கம்பெனி (China Harbour Eng.co) இதற்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்ற கதை..!
குப்பையை எடுத்துவர மட்டும் வருடாந்தம், 1,572 மில்லியன் (2012 கணிப்பு) தொடர்ந்து செலவாகப்போகும் கதை..!
இதற்கான ரயில் பாதைக்கு மாத்திரம் 52,060 மில்லியன் ரூபாய் கரையப் போகும் கதை...!!
தூரம் அதிகம் என்பதால், இடையில் அமையப்போகும் களனி - கரவெலபிடி Transition Center க்கு எத்தனை பில்லியன் என இன்னும் சொல்லப்படாத கதை..!!
இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான்...!! தூரம்..!!
பிணத்தை அங்கேயே அடக்கம் செய்யாமல் 170 Km தாண்டி மையவாடி அமைக்கும் கொடூரம்..!!
இத்திட்டத்தின் பின்னால், தேச நலனுமில்லை, தேசிக்கயுமில்லை..!! பணம்..!! ,
Project என்பது, இப்போது பணம் சுருட்டும் விஷேட வடிவம்...!!
பதவியும், ஒரு Black listed கம்பெனியும் கிடைத்துவிட்டால்... அனைத்தும் அங்கீகாரத்துடன் நடக்கும்..!!
பாவம், இந்தப் பணப்பசிக்கு பலிக்கடாவாகப்போகும் இலங்கையின் பரிதாப நிலம் தான் "புத்தளம் - சேரக்குழி"
கடலிலிருந்து 175 m ,
கல்பிட்டியிலிருந்து 4 km,
வில்பத்துவிலிருந்து 5.67 km,
காலா ஓயா ஆற்றிலிருந்து 5 km,
காரைதீவிலிருந்து 400m
சேரக்குளிய வீடுகளிலிருந்து வெறும் 250 மீட்டர்..!!
இவற்றுக்கு மத்தியில்தான், இந்த அணுகுண்டு புதைக்கப்படுகிறது...!!
இலங்கை வாழ் நல்லுள்ளங்களே, வந்து பாருங்கள்...!
நிலக்கீழ் நீரும், இயற்கை காடுகளும், உயிரோடு மனிதர்களும், உலகே மறுக்கின்ற (land fill அமைக்க) சுண்ணக்கல் நிலமும் உள்ள இடத்தில் தான் இத்திட்டத்தை திணிக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்..!!
இவைகள் வெளிச்சத்துக்கு வராது...!
கொழும்பிலே உச்சரிக்கப்படாது...! Media conference இல் பேசப்படாது...!!
உண்மைகளை மறைக்க உறக்கக் கத்துகிறார்கள்..!!
"மீதொட்ட முல்ல" மீதேன் வெடிப்புக்கும் - 31 உயிரிழப்புக்கும் அவர்களே காரணமாக இருப்பதும்..!!
"அதற்க்கு ஏன் ஹர்த்தால் நடத்தவில்லை" என அடுத்தவனைக் கேற்பதும்..!!
வருடங்கள் தாண்டி வழியப்போகும் "லீச்செட்" டை, சில வாரங்களில் வருகிறதா என வந்து பார்க்கச் சொல்வதும்..!!
இல்லாத பொய் இணைத்து animation காட்டுவதும்...! கடைசி ஆயுதமாய் இனவாதத்தை இயக்க முயற்சிப்பதும்...!!
இந்த மண்ணை நேசிக்காத மடையர்களிடம் மட்டுமே எடுபடும்..!!
தரம் கெட்ட தலைவர்களின் இருப்புக்காய்...! மக்கள் நரகத்தை சுவைக்க முடியாது...!!
இந்த நிஜங்களைச் சொல்ல கொழும்பு வருகிறோம்...!
இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவினதும் ஆதரவை எதிர்பார்த்து வருகிறோம்..!
இனம், மதம், மொழி கடந்து சந்ததி காக்கும் ஓர் சரித்திரப்போரை சத்தமாகச் சொல்ல வருகிறோம்...!!
கொழும்பில் எம்மோடு நீங்களும் கரம் சேருங்கள்..!
எங்கோ ஒரு மூலையில் இருந்து எமக்காக பிரார்தித்தவர்கள்கூட 19 ஆம் திகதி பக்கத்தில் வந்து நில்லுங்கள்..!
புத்தளம், அரசியலால் அநாதை ஆனாலும்.. எமக்கு சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை நிரூபியுங்கள்..!!
காலில் குத்திய முள்ளுக்கு கண்களும் அழும் என்ற எதிர்பார்ப்போடு,
புத்தளம்.
----
புத்தளம் மரிக்கார்
11-03-2019
0 Comments