Subscribe Us

தந்­தையால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்

தந்­தையால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட 13 வயது சிறு­மி­யொ­ருவர் தற்­கொலை செய்து கொண்ட கொடுமையான சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஷாங்ஸி மாகா­ணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி, தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு முன் எழுதி வைத்­தி­ருந்த குறிப்­புகள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அந்த சிறு­மியின் பெற்றோர் விவா­க­ரத்துப் பெற்ற நிலையில் அவர் தனது அத்­தை­யொ­ரு­வ­ருடன் வசித்து வந்துள்ளார். 

இதன்­போது அவர் தனது தந்­தையால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. சிறுமி அவ­ரது தந்­தையால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நேரத்தில் அவ­ரது அத்தை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­த­துடன் சிறு­மியை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­துள்ளார். 

இத­னை­ய­டுத்து பொலிஸார் அந்த சிறுமிவல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான சான்­று­களை சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையில் சிறு­மி­யிடம் தீவிர விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் மரணத்தையடுத்து அவரது தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ள னர்.

Post a Comment

0 Comments