கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு, சேராக்குளி பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் கொழும்பு முகத்திடலில் நேற்று (26-10-2018) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பெண்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
#CleanPuttalam மகளிர் அணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் இன மத வேறுபாடின்றி சிறுவர் சிறுமிகள், யுவதிகள் என அனைத்து பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.
புத்தளம், கரைதீவு, சேராக்குளி, தில்லையடி, பாலாவி, கல்பிட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மூவின மகளிர் அமைப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சுலோகங்கள் ஏந்தியவாறு பேரணியாக சென்று இறுதியில் புத்தளம் பிரதேச செயலகம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, மகளிர் விவகார பிரிவில் குப்பைக்கு எதிரான பெண்களின் எதிர்ப்பாக மனு ஒன்றும் கொடுப்பட்டது.
ஆர்பாட்டத்தின் போது கடுமையான மழை பெய்த நிலையிலும் மழையினையும் பொருட்படுத்தாது பெண்கள் தமது ஆர்பாட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.
இல்லத்தரசிகள், மூத்தோர்கள் ஆகியோரோடு சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட துறைசார் பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது. -Puttalam Today-
0 Comments