Subscribe Us

header ads

ஓய்வு பெற்றாலும் ஓய்வு பெறாத மக்கள் சேவகன் ஆப்தீன் ஆசிரியர்.


(03-06-2018) கல்பிட்டி பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தினால் சகோதரர் C.I.M. மர்சூக் அவர்களின் உதவியுடன் தலைவர்.M.H.M.ஹம்ஸா,தனாதிகாரி S.M.S.ஆப்தீன் ஆசிரியர் ஆகியோரால் முதியோர் சங்க உறுப்பினர்களுக்கும்,வறிய வயோதிபர்களுக்கும் வீடு வீடாக சென்று சத்துணவு வழங்கப்பட்டது,இந்த உதவியை வருடா வருடம் சகோதரர் மர்சூக் அவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இதேபோல அண்மையில் M.A.நவ்சாத் அவர்களும் இம்முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு ரமழானை முன்னிட்டு அரிசி பொதிகளை வழங்கி உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது இவரும் வருடா வருடம் இச்சங்கத்திற்கும் உதவி வருகிறார்.
தான் ஓய்வு பெற்றாலும் முதியோர் சங்கத்தில் பதவி வகித்து வசதி படைத்தவர்களிடத்தில் முயற்சி செய்து இதேபோல பல உதவிகளை ஆப்தீன் ஆசிரியர் அவர்கள் முதியோர் சங்கம் ஊடாக செய்து வருவதோடு,பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தை தலைவர்,செயலாளர்களுடன் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் நடத்தி வருவது பாராட்ட தக்கதவிடயமாகும்.பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தில் 70 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-





Post a Comment

0 Comments