அல்லாஹ்வின் பேருதவியால் பல வருடங்களாக ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமியின் உதவியுடன் நடைபெற்றுவரும் மாற்று மத மக்களுக்கான பெருநாள் பலகார விநியோகம் இம்முறையும் சில புதிய அணுகுமுறைகளோடு சிறப்பாக நடந்து முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பண மற்றும் பொருள் உதவிகளை செய்த ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமி,சமூக ஆர்வலர்கள்,ஊர் நலன்விரும்பிகளுக்கும் இப்பணிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய ஜம்இய்யாவின் ஊழியர்கள் அனைவருக்கும் ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.
இதேபோன்று இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த முறைகளிலும் இவ்வாறான சமூகப்பணிகளில் உங்கள் பங்களிப்புகளை செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
0 Comments